சென்னை,டிச.29- தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள கோவில் நிலத்தை மீட்க, வரு வாய், அறநிலையத்துறை, உள்துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், இதற்கான உத்தரவை பிறப்பித்ததோடு, இத்துறைகளின் உயர்அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை ஆறு வாரங்களில் கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், சட்டரீதியான நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.