சென்னை, டிச. 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனை வரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலா ளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:- தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2022ம் ஆண்டு ஜனவரி 31 ந்தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்க செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். சரியான காரண மின்றி சொத்து விவரங்களை தெரி விக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகா ரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.