மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடுக!
பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூன் 24 - மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டுமென பிரதமர் மோடி, ஒன்றிய வேளாண் அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங் களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முக மைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்திட வழிகாட்டுதல் கள் வழங்க வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக் காடாகக் குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்க ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோருக்குக் கடிதம் எழுதி யுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.