நயினாருக்கு துரை வைகோ மறுப்பு
சென்னை, ஜூன் 11 - பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என மதிமுக எம்.பி. துரை வைகோ உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது அவரது அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்றும் துரை வைகோ விளக்கம் அளித்திருக்கிறார்.
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னை, ஜூன் 11 - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி களுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை யை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வியாழக்கிழமை (ஜூன் 12) கோயம் புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை யும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்டோபரில் வாக்காளர் சரிபார்ப்பு
சென்னை, ஜூன் 11 - தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் அக்டோபரில் தொடங்கும் என்றும் முன்னதாக, வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் ஜூலையில் துவங்கும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார்.