tamilnadu

img

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கு திறப்பு

தஞ்சாவூர், மே 10 - ஒன்றிய அரசின் 2022-23 ஆம் ஆண்டு  நிதிநிலை அறிக்கையில் “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டம் அறி விக்கப்பட்டது.  இந்தத் திட்டத்தில் உள்ளூர் கை வினைப் பொருட்கள், கலைப் பொருட் கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ரயில்  நிலையங்களிலும், அதற்கான விற்பனை  அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட் டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவ தும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்க ளில், அந்தந்த உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 6  ரயில்வே கோட்டங்களில் முதற்கட்ட மாக கோட்டத்துக்கு ஒன்று வீதம் 6 ரயில்  நிலையங்களில் கைவினைப் பொருட் கள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது. அதில் திருச்சி ரயில்வே கோட்டத் தின் கீழ், இந்த திட்டத்தில் தஞ்சா வூர் ரயில்நிலையம் தேர்வு செய்யப்பட் டது. அதன்படி கடந்த மாதம் தஞ்சை ரயில் நிலையத்தில் தஞ்சையின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி அரங்கு அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. சுமார் ஒரு மாதமாக நெட்டி வேலைப்பாடு கலைப்பொருட்கள் விற்பனை நடை பெற்றது. இந்நிலையில், திங்களன்று புகழ்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற, தலையாட்டி பொம்மைகளின் விற்பனை  கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, திருச்சி உதவி விற்பனை மேலாளர் சந்திரசேகரன், தஞ்சை தலைமை விற்பனை ஆய்வாளர் தங்கமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த தலையாட்டி பொம்மை விற்பனைக் கண்காட்சியை தஞ்சை அருகே மாரியம்மன் கோவிலை சேர்ந்த  பூபதி என்பவர் வைத்துள்ளார். இவர்  கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தலை யாட்டி பொம்மையை தயார் செய்து வரு கிறார். ஐந்து தலைமுறைகளைத் தாண்டியும் இவரது குடும்பத்தினர் தலை யாட்டி பொம்மை தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், திங்கள் (மே 9) முதல் தஞ்சை ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மை விற்பனைக் கண்காட்சி அரங்கு திறக்கப்பட்டு செயல்படுகிறது. மே 23  ஆம் தேதி வரை இந்த விற்பனை கண் காட்சி அரங்கு செயல்படும். அதன் பின்னர் அவற்றை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். இதன் மூலம் கை வினைப் பொருட்களை தயாரித்து விற்ப வர்களின் வாழ்வாதாரம் உயரும். மேலும் உள்ளூர் கலைப்பொருட்களை நாடறியச் செய்ய முடியும் என்றார்.