tamilnadu

img

பழனி கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

சென்னை,ஜன.20- பழனி கோவிலில் ரூ.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம், அன்னதான கூடத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பழனி, தண்டாயுதபாணி திருக் கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், 23 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலம் வியாழ னன்று (ஜன.20) முதலமைச்சர் திறந்து வைத்தார். பழனி, பாலசமுத்திரம் கிராமம் அருகில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்டி அதில் இருந்து மலைக்கோவில், தங்கும் விடுதிகள் மற்றும் சார்பு நிறு வனங்கள் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றுக்கு 2.31 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கும் வகையில் 22 கோடியே 72  லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிநீர்  வடிகால் வாரியம் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை புரியும் முதி யோர்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்காக மின்கல மகிழுந்து (பேட்டரி கார்) பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து கம்பிவட ஊர்தி மேல் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் வெளிப் பிரகாரத்திற்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக 13 நபர்கள் செல்லும் வகையில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி (லிப்ட்) உபயதாரர் மூலம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மலைக்கோவிலில் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மணி ஓசை எழுப்பும் வகையில் புதியதாக நாதமணி மண்டபம் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்முழுவதும் அன்ன தானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் சுமார் 5,000 பக்தர்கள் உணவருந்தி வரு கிறார்கள். இதன் உபகோவிலான பெரியநாயகியம்மன் கோவிலில் அன்னதானத் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத் திட்டத்தில் உண வருந்த வரும் பக்தர்கள் வசதிக்காக 58 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 108 இருக்கைகளுடன் கூடிய புதிய அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம்  மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு  மற்றும் அறநிலையங்கள் துறை  முதன்மைச் செயலாளர் பி.சந்தர  மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்  சக்கரபாணி, மக்களவை உறுப்பினர ப.வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் அரசு  உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.