சென்னை,டிச.14- கடைகளுக்கு ஒரே சீரான வாடகையை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விக்கிர மராஜா மனு அளித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா, சென்னை தலைமை செயல கத்தில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:- பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று கட்டணமில்லா வணிகர் நல வாரிய உறுப்பினர்களாக வணிகர்களை இணைத்துக் கொள்ளும் காலத்தை மார்ச் வரை நீட்டித்து தந்ததற்கு நன்றி. பதிவு பெற்ற வணிகர் சங்கங்களின் பரிந்து ரையை ஏற்று அனைத்து வணிகர்க ளையும் உறுப்பினர்களாக சேர்க்க அனு மதிக்க வேண்டும். உள்ளாட்சி கடைகள், நகராட்சி கடை கள், அறநிலையத் துறை கடைகள், ஸ்மார்ட் சிட்டியால் பாதிக்கப்பட்ட கடைகள் அனைத் தையும் பாதிக்கப் ்பட்ட வணிகர்களுக்கே திரும்பத் தர வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே சீரான வாடகையை முறைப்படுத்தி அமல்ப டுத்த வேண்டும். வணிகர் நல வாரி யத்தை சீரமைத்து செயல்படுத்த உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அதில் இடம் ்பெற்றிருந்தன.