சென்னை, ஜன.3- கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற த்தில் இனி நேரடி விசாரணை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பதிவாளர் வெளி யிட்டிருந்த சுற்றறிக்கையில், ஜனவரி 3 முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு வழக்குகள் காணொலி காட்சி மூலம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை யில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஜனவரி 3 முதல் காணொலிக் காட்சி மூலம் மட்டுமே வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றன. நேரடி விசாரணை கிடையாது மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரி வித்துள்ளார்.