tamilnadu

img

மதுரை கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல் 100 கோடி ரூபாய் கல்விக்கடன்

மதுரை,ஜன.18-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செவ்வாயன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது: மதுரையின் நலனுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் செய்து வரு கிறோம். அதில் மிக முக்கியமான குறிப்பிடத்தக்க முயற்சி மதுரையில் பள்ளிக்கல்வியை முடிக்கும் மாண வர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்காக கல்விகடன் பெற்றுத்தரும் முயற்சி.  மதுரையில் எந்த ஒரு மாண வருக்கும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பு பறி போய் விடக்கூடாது என்கிற நோக்கத் தோடு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.  பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் கல்விக்கடன் தருதல் 2020-21 ஆம் ஆண்டில் 54 விழுக்காடு குறைந்துள் ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் பல மடங்கு உயர்ந்து 100 கோடி ரூபாய் கல்விக்கடன் தரப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி இவ்வியக்கத்தை மாவட்ட நிர்வா கம், வங்கி நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவகப் பணியாளர்களோடு முன்னெடுத்தோம்.

மதுரையில் உள்ள 357 மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்விக் கடன் பெறுதல் பற்றி விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆய்வுக்கூடங்கள் நடைபெற்றன. அக்டோபர் 20 ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தி னோம். 1355 மாணவர்கள் பதிவு செய்த னர். அன்றைய நாளிலேயே 11.81 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணப் பித்த அனைவரின் மனுக்களையும் முறையாக பரிசீலித்து கடன் வழங்கியதில் 100 கோடி ரூபாய் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதுவரை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 1095 மாணவர்களுக்கு 99.29 கோடி ரூபாய்  கடன் தரப்பட்டுள்ளது.  12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடி ரூபாயும், 28 தனி யார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில்  மிக அதிக மாக கனரா வங்கி  38.21 கோடி ரூபாயை யும், பாரத ஸ்டேட் வங்கி 27.89 கோடி ரூபாயையும் கல்விக்கடனாக வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இவ்விலக்கினை அடைய கடந்த ஆறு மாதங்களாக உழைத்திட்ட மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகங் கள் குறிப்பாக முன்னோடி வங்கி மேலா ளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பின ரின் அலுவலக ஊழியர்கள், ஊடக நண் பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார்.  பேட்டியின் போது கட்சியின் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா ஆகியோர் உடனிருந்தனர்.

;