tamilnadu

img

பாலியல் வன்முறை குற்றத்தில் காசி மீது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்...

நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோக்கள் எடுத்து அவற்றை வைத்து மிரட்டி  பணம் பறித்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து காசி கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒருஇளைஞர் அளித்த புகார் மற்றும்இதுவரை காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே, கந்துவட்டி தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு வழக்குகள் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளன. பொங்கல் விடுமுறைமுடிந்ததும் இந்த மூன்று வழக்கு கள் மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன என சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் மற்றும் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

இந்நிலையில் திங்களன்று இரவு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடி காவல் துறையினர் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததும் மேலும் 3 வழக்குகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம்.

;