tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா மறைவு

மதுரை, நவ.16- சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வரும் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒரு வரான தோழர் என்.சங்கரய்யா (102) வயது  முதிர்வு, உடல்நல குறைவால் நவம்பர் 15  அன்று காலமானார்.  தோழர் சங்கரய்யாவின் மறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும்  அஞ்சலி, மௌன ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை

இதன்படி, மதுரை புறநகர் மாவட்டம் அவனியாபுரம் தாலுகா குழு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் பங்கேற்போடு அஞ்சலி கூட்டம் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவ னியாபுரம் தாலுகாச் செயலாளர் எம்.தன பாலன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்  டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோ வன், மதிமுக கவுன்சிலர் அய்யனார், காங்கி ரஸ் குமரய்யா, திமுக அவைத் தலைவர் சிவமணி, குபேந்திரன், வாலிபர் சங்க மாவட்  டத் தலைவர் கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  சமயநல்லூரில் மேற்கு ஒன்றியக் குழு  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின்  மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம் தலைமை வகித்தார். மாநிலக் குழு  உறுப்பினர்கள் எஸ்.பாலா, எஸ்.கே. பொன்னுத்தாய், திமுக ஊராட்சி செயலர் வீரக்குமார், அதிமுக பரவை பேரூர் தலை வர் நாகமலை, சமயநல்லூர் ஊராட்சி தலை வர் மலையாளம், வியாபாரிகள் சங்கத்  தலைவர் கனி உட்பட பலர் கலந்துகொண்ட னர். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு தாலுகா செயலாளர்  எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். திமுக  கிருஷ்ணபாண்டியன், ஏ.எஸ்.வி.ரமேஷ், காங்கிரஸ் ஏ.எஸ்.வி.மகேந்திரன், மேற்கு மண்டலத் தலைவர் சுவிதாவிமல், மதிமுக முருகேசன், தமாக துரைராஜா, விசிக முத்துக்குமார், மக்கள் நீதி மய்யம் ராஜா, நாம் தமிழர் கட்சி ஆறுமுகம், திரிணாமுல் காங்கிரஸ் சண்முகநாதன், சிபிஐ முத்து வேல், சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலா ளர் சி.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்  என்.விஜயா ஆகியோர் உட்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர். செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்க லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஆர்.ரவி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பாண்டி, ஒன்றியச் செயலாளர் வி.பி.முரு கன், தி.க.சந்திரன், விதொச மாவட்டச் செய லாளர் விருமாண்டி, சிபிஐ செல்லம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயக்குமார், திமுக விவசாய அணி பி.டி.மோகன், பார்  வர்ட் பிளாக் வழக்கறிஞர் பிரிவு செயலா ளர் இளையரசு, செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா, (அதி முக) விவசாயிகள் சங்கம் எம்.பி.ராமன், அம முக மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலூர் தாலுகா அய்யம்பட்டியில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு அய்யம்பட்டி கிளை செயலாளர் ஏ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், விசிக சின்னச்சாமி, தமிழ் தேச குடியரசு இயக்கம் இரா.தமிழரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கிளை நிர்வாகி கள் கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். யா.ஒத்தக்கடையில் கட்சியின் கிழக்கு தாலுகா குழு சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தாலுகா செயலாளர் எம்.கலைச் செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். மாயாண்டி, மதிமுக நீலமேகம், விசிக ஆறு முகம், மக்கள் அதிகாரம் சரவணன், சிபிஐ  மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பா. காளிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். கள்ளிகுடி ஒன்றியக் குழு சார்பில் கட்சி அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் பி. ராஜேந்திரன் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலத்தில் ஒன்றியக் குழு சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் பி.மூர்த்தி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  சேடபட்டி ஒன்றியக் குழு சார்பில் அத்தி பட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில்  ஒன்றியச் செயலாளர் காசிமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தீக்கதிர் மதுரை பதிப்பு சார்பில் அஞ்சலி

மதுரை தீக்கதிர் பதிப்பு சார்பில் அஞ்சலி  நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக் குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரி யருமான எஸ்.பி.ராஜேந்திரன் தலைமை யில் புதனன்று தீக்கதிர் வளாகத்தில் நடை பெற்றது. இதில், தீக்கதிர் முன்னாள் ஆசி ரியர் வி.பரமேஸ்வரன், மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழ் சிறப்பு ஆசி ரியருமான மதுக்கூர் ராமலிங்கம் உள்  ளிட்டோர் தோழர் சங்கரய்யா உருவப்படத் திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியில் தீக்கதிர் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் புலிகள் கட்சி சார்பில் அஞ்சலி மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அரு கில் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் சி.பேரறிவாளன், அமைப்புச் செயலாளர் மா.முகிலரசு, தலைமை நிலைய செயலாளர் சிறுத்தை செல்வம், மண்டலச் செயலாளர் சிதம்பரம், மாவட்ட செயலாளர்கள் கரும்பாலை பவுளி,  உ.நீதிவேந்தன், அ.மதுரைவீரன், மற்றும் விசிக, தபெதிக, அதிமமுக, புஇமு, தமி ழக முன்னேற்ற கழகம், தமிழ்த்தேச குடியரசு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விருதுநகர்
 

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து இந்தியன் வங்கி  வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்பு, நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, பி.அன்புச்செல்வன், ஒன்றியச் செயலாளர்கள் எம்.கணேசன், மார்க்கண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.தாமஸ், திக மாவட்டச் செயலாளர் ஆதவன், விசிக மாவட்டச் செயலாளர் இனி யவன், சிபிஐ தாலுகா செயலாளர் முனிய சாமி உட்பட பலர் பங்கேற்றனர். மல்லாங்கிணறில் தாலுகா குழு உறுப்பி னர் எம்.பரமசிவம் தலைமையில் ஊர்வலம், இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்ட செயலாளர் எ.அம்மாசி துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் துளசி, திமுக நகர் செயலாளர் முருகேசன், சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர்கள் பி.மலைச்சாமி, முக மது அலி ஜின்னா, மூத்த தலைவர்கள் ஆறு முகம், இருளன் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகங்கை காரைக்குடி பழைய பேருந்து நிலை யத்தில் துவங்கிய இரங்கல் ஊர்வலம் கல்  லுக்கட்டியை சுற்றி வந்து, அண்ணா சிலை (இரண்டாவது பீட்) அருகில் முடிவ டைந்தது. பின்னர் நடைபெற்ற இரங்கல்  தொடர்ச்சி 7 ஆம் பக்கம்