சென்னை,டிச.27- ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விதிக்கப்படு கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து அனைத்து மாநில நிதி அமைச்சர்க ளுடன் ஒன்றிய அரசு ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்தி வரு கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சீர்திருத்தங்களை செய்து வருகிறது. மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று ஒரு சில தொழில், பொருட்களுக்குவரி விதிப்பை குறைத்தும், சிலவற்றிற்கு அதிகரித்தும் செயல்படுத்துகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை ஒன்றிய அரசு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கொண்டு வருகிறது.
ஆன்லைன் வழியாக முன் பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. புதிதாக விதிக்கப்படு கிறது. ஏற்கனவே ரெயில், ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விதிக்கப்படு கிறது. ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்ப டுகிறது.
அதன்படி வருகிற 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வாடகைகார்களை புக் செய்யும் போது அதற்கு பயணிகள் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். இதுவரையில் ஓலா, ஊபர், கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் செல்லக்கூடிய இடத்திற்கு கிலோ மீட்டர் கணக்கிடப்பட்டு வாடகை கட்டணம் மட்டும் வசூலிக்கப்ப ட்டது. இனிமேல் அதற்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. கூடுதலாக வசூலிக்கப் படும். ஆம்னி பேருந்துகளில் ஏ.சி. பேருந்துகளுக்கு மட்டும் ஏற்கனவே 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. 1 ஆம் தேதி முதல்குளிர்சாதனவசதி இல்லாத ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்படுகிற பேருந்துகளுக்கும் புதிதாக ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. காலணி மற்றும் ரெடிமேடு மற்றும் அனைத்து ஜவுளி வகைகளுக்கு 12 விழுக்காடு ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.