கணேஷ் வழக்கம்போலவே வகுப்பு களைகட்டியிருந்தது. கலைத்திருவிழாவில் பரிசுகளைப் பெற்ற உற்சாகமும் அவர்கள் முகங்களில் தெரிந்தது. உள்ளே நுழைந்த ஆசிரியர், “யாரா வது மந்திரவாதி வேஷம் போட்டீங் களா” என்றார். இல்லை என்பதற்கு அறி குறியாகத் தலைகள் அசைந்தன. “உங்களுக்கு மந்திரம் சொல்லித் தரட்டா?” என்று அவர் கேட்டவுடன் அனைவரும் உற்சாகமாகி குரல்களை உயர்த்தி “சொல்லுங்க சார்” என்றனர். “அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்கட்டா?” “கேளுங்க சார் கேளுங்க” “உங்கள்ல எத்தனை பேரு பகல்ல நட்சத்திரத்தப் பாத்துருக்கீங்க” கிட்டத்தட்ட அனைவரும் உதட்டைப் பிதுக்கினர். ஒரு மாணவர் எழுந்து வெளியில் ஓடினார். திரும்பி வந்தவரிடம் “எங் கப்பா போனீங்க” என்று கேட்டபோது, “நட்சத்திரம் தெரியுதான்னு பாக்கப் போனேன் சார்.. ஒண்ணு கூட தெரியல” என்றார். சிலர், பாக்க முடியாது என்றும், சிலர் சூரிய வெளிச்சம் மறைச்சுரும்னும், சிலர் நட்சத்திரம் அங்கேயேதான் இருக்கும் என்றும் சொன்னார்கள். மாணவர்கள் ரொம்ப நெருக்கமாகி விட்டார்கள் அல்லவா..? அதனால் ஒரு மாணவர் உதட்டில் நக்கல் தவழ்ந்த வாறே கையை உயர்த்தினார். “நீ பார்த்திருக்கிறாயா?” “ஆமா சார்... பகல்ல நயன் தாராவப் பாத்துருக்கேன்”.. சினிமா நட்சத்திரமாம்.. வகுப்பே “கொல்” என்று சிரித்தது. சிலர் “லகலக” என்றனர். “நான் சொல்ற மந்திரத்தப் போட்டா நட்சத்திரத்தப் பாக்கலாம்” என்றவுடன் அதிர்ந்தனர. ஆனால், ஆட்டத்திற்குத் தயாராகினர். “ஓம்..” என்றவுடன் எல்லாரும் “ஓம்” என்றார்கள். “க்ரீம்” என்றவுடன் அனைவரும் “க்ரீம்” என்றனர் அடுத்து, “ஐஸ்கிரீம்” என்றவுடன் சொல்லாமல் சிரித்தனர். “மந்திரத்த முழுசா சொல்லலைனா பலிக்காது” என்றவுடன், அனைவரும் “ஐஸ்கிரீம்” என்றனர். அனைவரும் வெளியே சென்று வானத்தைப் பார்த்து, “ஓம்.. க்ரீம்... ஐஸ்கிரீம்..” என்றார்கள். மந்திரத்திற்கு முன்பாக வானம் எப்படி இருந்ததோ, அப்படித்தான் மந்திரத்திற்குப் பிறகும் இருந்தது. என்னையே வெறித்தார்கள். மெதுவாக, “சூரியனும் நட்சத்திரம் தானேப்பா” என்றேன். மூன்று ஆண்டு களுக்கு முன்பே வகுப்பில் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வர, “அப்போ அந்த மந்திரம் சும்மாவா சார்” என்று ஒரு மாணவர் கேட்க, மற்றொரு மாண வர், “மந்திரம்லாம் சும்மாதான்டா” என்று சொல்லிக் கொண்டே வகுப் பிற்குள் சென்றார்.