சென்னை, ஜூலை 27- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா வான செஸ் ஒலிம்பியாட் போட்டி யில் 188 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள் கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரி வில் போட்டிகள் நடக்கிறது. இதற்கிடையே போட்டியை யொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது. இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கு வதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இந்த முறை நேர மின்மை காரணமாக சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடை பெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி புதுதில்லியில் செஸ் ஒலிம்பி யாட் சுடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடுமுழுவதும் 75 நகரங்களுக்கு சென்ற இந்த பயணம் தமிழ்நாட்டிலும் குமரி, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வலம் வந்தது. இறுதியாக புதனன்று (ஜூலை 27) மாமல்லபுரத்தை வந்தடைந்தது. தமிழக அமைச் சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகி களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாமல்லபுரம் நுழைவு வாயில் நமது பாரம்பரிய வீர விளையாட்டுக்கள், மேளதாங் கள் முழுங்க கலை நிகழ்ச்சிக ளுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சி யில் அரசு அதிகாரிகள், பொது மக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர், சென்னை மாநகரத் திற்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். இதையொட்டிசென்னை மாநிலக் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய தொடர் ஓட்டம் காம ராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பயணித்து நேரு விளை யாட்டரங்கத்தை சென்ற டைந்தது. வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு கொடுத்த னர். இந்த நிகழ்ச்சியில் அமைச் சர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.