சென்னை, ஜூன் 24- ஒப்பந்தமுறை மூலம் தொழிலா ளர்களின் உழைப்பை சுரண்டுவதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தி யுள்ளது. ஐஓசி, பிபிசி, எச்பிசி எண்ணெய் நிறு வனங்களில் தென்னிந்திய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளி யன்று (ஜூன் 24) தர்ணா நடைபெற்றது. ஐஓசி பாலு தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் கே.ஆறுமுக நயினார், பொதுச்செயலாளர் கே.விஜ யன், சிஐடியு மாநில துணைத் தலைவர் இ.பொன்முடி, மாநிலச் செயலா ளர் வி.குப்புசாமி, ராஜலிங்கம் (ஐஓசி ஓய்வு), தெலுங்கானா மாநிலச் செயலா ளர் மது, பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் பால கோபால், சீனிவாச ரெட்டி (ஆந்திரா), பாலாஜி (கர்நாடகம்), சரவணன் (க்யூப் பிளாண்ட் செயலாளர்), ஜி.வி நாயகமூர்த்தி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களிலிருந்து நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் இந்த தர்ணாவில் பங்கேற்றனர்.
20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் 20 ஆயிரத்தை தொட வில்லை. ஆனால் கடுமையாக வேலை வாங்கப்படுகிறது. தினசரி 5 டன் முதல் 7 டன் வரை கேஸ் சிலிண்டரை இழுத்துச் சென்று லாரியில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தொழி லாளர்கள் கடுமையாக உழைக் கிறார்கள். தென் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொண்டு சேர்க்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் அத்துக் கூலிகளாக அடி மைகள் போல் நடத்தப்படுகிறார்கள. நவரத்னா என்று அழைக்கப்படும் இந்த எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றி வரும் இத்தொழிலாளர்க ளுக்கு இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்வது கிடையாது. ஊதியம் கிடையாது. உரிமையாளர் கொடுக்கும் ‘படி’ காசை கொண்டு தான் வாழ்வாதாரத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. அதே போல் தொழிலாளர்கள் பணி செய்து ஓய்வுபெறும் போது பணிக்கொடை கிடையாது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லாபம் 21 ஆயிரம் கோடி ரூபாய், பாரத் பெட்ரோலியம் லாபம் 19 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் லாபத்தை உருவாக்கி கொடுக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை இழந்து நிற்கின்றனர். ஆகவே, 3 நிர்வாகங்களும் உடனடியாக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்சம் 45 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு மாத ஊதி யம் வழங்க வேண்டும், சமூக பாது காப்பான பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின் போது இறக்கும் தொழிலா ளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். லொடிங் அன்லொடிங் பிரிவை உருவாக்கும் முயற்சியையும், ஒப்பந்த முறை மூலம் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நடவடிக் கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்த தர்ணாவில் வலியுறுத்தப்பட்டது. கே.விஜயன் தலைமையில் சங்க நிர்வாகிகள் இந்தியன் ஆயில் பவன் நிர்வாக இயக்குநர் வி.சி.அசோகனை சந்தித்து மனு அளிக்கச் சென்றனர். ஆனால் அவர் மனுவை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக நிர்வாகி கள் தெரிவித்தனர்.