tamilnadu

img

டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குக! சென்னையில் கரும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்

டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குக!

சென்னையில் கரும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்

சென்னை, மே 27- தேர்தல் வாக்குறுதிப்படி டன்  கரும்புக்கு மாநில அரசு 4ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி செவ்வாயன்று (மே 27) சென்னை எழும்பூர் ராஜரத்தி னம் மைதானம் அருகில் கரும்பு விவ சாயிகள் போராட்டம் நடத்தினர். கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ஒன்றிய அரசு 5 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் வாக்கு றுதிப்படி மாநில அரசின் பரிந்துரை விலையுடன் சேர்த்து 4 ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு முழுவதும் இருந்து விவ சாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக,எழும்பூர் அரசு  கண் மருத்துவமனை அருகில் இருந்து கையில் கரும்புகளுடன் கோரிக்கை களை முழங்கியபடி போராட்டம் நடை பெறும் இடத்திற்கு விவசாயிகள் ஊர் வலமாக வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத் தின் போது செய்தியாளர்களிடம் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்தி ரன் கூறியதாவது, “தமிழ் நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. 2012ஆம் ஆண்டு  24 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அதிகபட்ச மாக 7 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி யாகிறது. இதற்கு ஒன்றிய பாஜக அர சின் கொள்கையே காரணம். 9.5 பிழி திறன் கொண்ட டன் கரும்புக்கு 5 ஆயி ரத்து 500 ரூபாய் வழங்க வேண் டும் என்று நாடு முழுவதும் விவசாயி கள் போராடி வருகின்றனர். உற்பத்தி செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஒன்றிய பாஜக அரசு விலையை உயர்த்தி வழங்க மறுக்கிறது.  வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்து ரையை அமல்படுத்தாமல் 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளது. வருவாய் பங்கீடு சட்டத்தை  ரத்து செய்க தமிழ்நாடுஅரசு கடந்த 5 ஆண்டில் ஆயிரத்து 145 கோடி ரூபாயை ஒதுக்கி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி உள்ளது. அதிமுகஆட்சியில் வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை கொண்டு வந்து மாநில அரசின் பரிந்துரை விலை முறையை ரத்து செய்துள்ளது. திமுக அரசு அந்த சட்டத்தை ரத்து செய்து விட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி அக்.1 முதல் டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும்.மதுரை அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருப்பூர் அமராவதி கூட்டு றவு சர்க்கரை ஆலை, என்பிகேஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர் சர்க்கரைஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடம் (எஸ்டிஎப் நிதியி லிருந்து) ஆயிரம் கோடிரூபாய் கடனை பெற்று இந்த ஆலைகளை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அறிவித்து (2014-17 ஆண்டுகளுக்கான) பரிந்துரை விலை யான ஆயிரத்து217 கோடி ரூபாயை தனியார் சர்க்கரை ஆலைகள் 8 ஆண்டு களாக வழங்காமல் உள்ளன. எனவே தமிழக அரசு, தனியார் ஆலைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க  வேண்டும். 24 தனியார் சர்க்கரை ஆலை கள் இடமிருந்து அந்த தொகையை வசூலித்து தர வேண்டும்”இவ்வாறு அவர்கூறினார். இந்தப்போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி செய்தியாளர் களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் குறைந்த பட்ச தேவைக்கான சர்க்கரை  கூட உற்பத்தியாகவில்லை. நிர்வாகக் கோளாறு காரணமாக மூடிக் கிடக்கும் ஆலைகளை திறக்க அரசு அக்கறை யின்றி உள்ளது. இந்த ஆலைகளை திறக்க அரசு கவனம் செலுத்தாதது வருத்தமளிக்கிறது. தனியார் ஆலை கள் நிலுவை தொகைகளை தராமல் விவசாயிகளை பட்டினிபோடுகிறது” என்றார். தமிழ்நாட்டில் மூடிக் கிடக்கும் ஆலை களை திறக்க அரசுக்கு மிக குறைந்த செலவே ஆகும். அதனை கூட அரசு செய்ய மறுப்பது ஏன்? கரும்பு விவ சாயிகள் கோரிக்கைகளை மீண்டும் அமைச்சர் இடத்தில் வலியுறுத்து வோம் என்றும் அவர் தெரிவித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செய லாளர் பி.பெருமாள், கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.