சென்னை, பிப்.20- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்த லில் இரட்டை இலை வெற்றி பெற முடியாத சூழல் நிலவுவதாக ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தலைமைக் கழக நிர்வாகி கள், மாவட்ட செயலாளர்கள் கூட் டம் தெரிவித்துள்ளது. ஈரோடு (கிழக்கு) இடைத்தேர் தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடை பெற உள்ளது. இந்நிலையில் ஓ.பன் னீர்செல்வம் சென்னையில் அதி முக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்கழகச் செயலா ளர் கூட்டத்தை திங்களன்று சென் னையில் நடத்தினார். அந்தக் கூட்டத் தின் முடிவில் தலைமைக் கழகம் சார் பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பேரறிஞர் அண்ணா-வின் பொன்மொழிக்கேற்ப “அநியா யம்”, “அதர்மம்”, “அராஜகம்”, “அதிகார போதை”, “ஆணவம்” ஆகியவற்றின் துணை கொண்டு ஒரு சர்வாதிகாரக் கும்பல் அதிமுக- வை அபகரிப்பதைத் தடுக்கும் வகை யில், அதிமுக என்னும் தொண்டர் கள் இயக்கத்தை, மக்கள் இயக் கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடமிருந்து மீட்போம். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கழகத்தை சர்வாதிகாரக் கும்பலி டமிருந்து மீட்டெடுப்பதோடு மட்டு மல்லாமல், இரட்டை இலை சின்னத் தையும் நிரந்தரமாகப் பெற்று “2019 மக்களவைத் தேர்தல் தோல்வி”, “2019 கிராமப்புற உள்ளாட்சித் தேர் தல் தோல்வி”, “2021 சட்டமன்றத் தேர்தல் தோல்வி”, “2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி” என தொடர் தோல்விகளைச் சந் தித்து வரும் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இரட்டை இலை வெற்றி பெற வேண்டுமென்பதற்காக கழ கம் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இவ்வளவிற் குப் பிறகும் இரட்டை இலை வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நிலவுவதாக அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையை நினைக்கும் போது, “அதிகாரம் கள்ளினும் காமத் தினும் போதை மிக்கது”. அதிக அதி காரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட் டவர்கள், வெகு சுலபத்தில் கைவி டத் துணியார்” எனக் கூறப் பட்டுள்ளது.