tamilnadu

img

பிரதமர் இல்லம் முன்பு அமர்ந்து வீடு திரும்பா போராட்டம்

கோவை, ஜன. 5 -  என்.டி.சி மில்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திறக்காவிட்டால், பிரதமர் இல்லம் முன்பு் அமர்ந்து  வீடு திரும்பா போராட்டத்தில் என்.டி.சி தொழி லாளர்கள் ஈடுபடுவார்கள் என சேவ் என்டிசி அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள என்.டி.சி மில்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது வரை அவை இயக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும், ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு வந்த 50 சதவீத ஊதியமும் சமீபகாலமாக முறை யாக வழங்கப்படவில்லை.  இதையடுத்து நாடு முழு வதுமுள்ள 23 என்.டி.சி மில்களில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேவ் என்.டி.சி என்ற அமைப்பு துவங்கப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பில் கோவையிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் புதனன்று தெற்கு  வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மகாராஷ்டிரா  மாநில முன்னாள் அமைச்சரும், சேவ் என்டிசி அமைப்பின் அகில இந்திய தலைவருமான  சச்சின் அகார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், என்.டி.சி பஞ்சாலைகளை உடனே திறக்க வலியுறுத்தியும், ஆலையின் சொத்துக்களை விற்பனை செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  

இதனையடுத்து செய்தியாளர்களிடம் சச்சின் அகார் கூறுகையில், “ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலையை தருவோம் என்கிற வாக்குறுதி யை அளித்து ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. ஆனால் அரியணையில் ஏறிய பிறகு இருக்கிற வேலையையும் பறிக்கிற  வேலை செய்து வருகிறார். மேக் இன் இந்தியா என மேடை தோறும் முழங்கு கிறார். ஆனால் நடைமுறையில் மத்திய அரசுக்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகளைக்கூட  இயக்க மறுக்கிறார்.   ஆகவே, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டு, பஞ்சாலைகளை இயக்க அரசு முன்வராவிட்டால், பிரதமர் மோடியின் அகமதாபாத் இல்லத்தின் முன்பு அமர்ந்து வீடு திரும்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக”  தெரிவித்தார். 

பி.ஆர்.நடராஜன் எம்.பி.,

இதைத்தொடர்நது கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வருகிற குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றிய பின்பு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், பஞ்சாலைகளில் கருப்பு கொடி காட்டியும் தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  இதனைத்தொடர்ந்து ஆலையினுள் அமர்ந்து வீடு திரும்பா போராட்டமும், பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது பிரதமரை சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். இதற்கெல்லாம் செவிசாய்க்காவிட்டால் பிரதமர் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடு வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.  முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் சேவ் என்டிசி  ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன், தென்னக ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி உள்ளிட்ட அனைத்து என்டிசி தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.