tamilnadu

img

பாசிச பாஜக அரசுக்கு முடிவு கட்டுகிற மகத்தான கடமையை செய்து முடிப்போம்

சென்னை, நவ. 7- அம்பானி, அதானி போன்றவர் களை வாழவைக்கும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுகிற பணியை இடதுசாரி அமைப்புகளும், முற்போக்கு சக்திகளும் முன்னெடு க்கும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உறுதி கூறினார். 105ஆவது நவம்பர் புரட்சி தின விழா சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் கே.சர வணன் தலைமையில் திங்களன்று (நவ. 7) நடைபெற்றது. கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி னார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, வே.ராஜசேகரன், ப. சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனிதகுல வரலாற்றில் முதன் முறையாக மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதற்கும், சுரண்ட லுக்கும் முடிவு கட்டி சோவியத் ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடை பெற்ற மகத்தான புரட்சியின் 105 ஆவது  தினம் உலகம் முழு வதும் கொண்டாடப்படுகிறது. உல கில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், மனிதகுலத்தினுடைய எல்லா நலன்களையும் பாதுகாக்கிற, மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிற ஒரு பொதுவுடமை அமைப்பு அங்கு முதன்முதலில் உருவானது. உலகில் ஏகாதி பத்திய நாடுகள்  எல்லாம் கடுமையான பொருளா தார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பஞ்சம் நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சோசலிச நாடுகளில்தான் மக்களு டைய அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, வறுமை ஒழிக்கப் பட்டு, வாழ்வாதாரம் பாதுகாக்கப் பட்டது.

வறுமை ஒழிப்பு

சமீபத்தில் நடைபெற்ற சீன கம்யூ னிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாட்டில் முற்றாக வறுமையை ஒழித்துவிட்டோம் என்று அறி வித்துள்ளார்கள். உலகின் பிற நாடு களின் பொருளாதாரத்தை விட சீனப்  பொருளாதாரம் அனைத்து வகை யிலும் முன்னேற்றம் அடைந்துள் ளது. எனவே முதலாளித்துவ சமூகம் வளர்ச்சி அடைந்தாலும் அது மனித குலத்தை பாதுகாக்கவில்லை, வாழ்வாதாரத்தை உத்தரவாதப் படுத்தவில்லை, சமூக ஜனநாயக  உரிமைகளை, மொழி உரிமை களை, சமூக நீதிகளை பாதுகாக்க வில்லை. அமெரிக்க ஏகாதிபத்தி யம் உலகத்தை ஆட்டிப்படைக்க நினைத்தாலும், அதை எதிர்த்து வலு வான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளன. அமெரிக்காவிற்கு அரு கில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடு களில் ஏற்கனவே 11க்கும் மேற்பட்ட நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், சமீபத்தில் பிரேசிலில் நடைபெற்ற தேர்தலிலும் இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி பெற்றுள்ளார்.

சோசலிசத்தின் சாதனை

வரலாற்றில் சோசலிசம் சாதித் திருக்கக் கூடிய எத்தனையோ சாத னைகளை உலகம் கண்டிருக்கிறது.இரண்டாவது உலகப் போரின் போது நடைபெற்ற பாசிசக் கொடு மைகளில் இருந்து உலகத்தை மீட்ட பெருமை சோசலிச நாடான சோவி யத் யூனியனைச் சாரும். அதே போல் 3ஆம் உலக நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தது சோவியத் யூனியன். இந்தியாவில் பாசிச சக்தியாக விளங்கக் கூடிய  பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சை வீழ்த்து கிற மகத்தான கடமையை பாட்டாளி  வர்க்கம், உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சி

இந்தியா முன்னேறிக் கொண்டி ருக்கிறது என்று நிர்மலா சீதாராம னும், பிரதமர் மோடியும்  கூறினா லும், உலகில் பட்டினிப் பட்டியலில் இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளதை மறந்துவிடக்கூடாது. இது மிகப்பெரிய அவமானம். அதிக மக்கள் பட்டினியால் வாழக் கூடிய நாடாகத்தான் மோடி ஆட்சியில் இந்தியா உள்ளதே தவிர எந்த வளர்ச்சியும் அடையவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதி கரித்து வருகிறது, ரூபாயின் மதிப்பு  வீழ்ச்சியடைந்து வருகிறது, விலை வாசி உயர்வு கடுமையாக உள்ளது.  தொழில், விவசாயம் முடங்கிப் போயுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வக்கில்லாத மோடி ஆட்சி, மதவெறி, சாதி வெறியின் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலையை முன்னெடுக்கிறது.

வரிசையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சாதா ரண ஏழை எளிய மக்களை காவு கொடுத்து அம்பானி, அதானி  போன்றவர்களை வாழவைக்கும் இந்த ஆட்சிக்கு முடிவு  கட்டுகிற பணியை இடதுசாரி அமைப்புகளும், முற்போக்கு  சக்திகளும் முன்னெடுக்கும். எப்போது ஒரு சோசலிச அமைப்பு இந்தியாவில் உருவாகிறதோ அப்போதுதான் நாடு  முழு விடுதலை அடைய முடியும். மக்களின் வாழ்வாதாரம், ஜனநாயக உரிமைகள், சமூக நீதி பாதுகாக்கப்படும். அப்ப டிப்பட்ட சோசலிச சமூக அமைப்பை உருவாக்க, மக்கள் ஜன நாயக புரட்சியை முன்னெடுக்க இந்நாளில் உறுதியேற் போம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த  அவர்,  தமிழிசை சவுந்தர்ராஜன் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டுகிறாரே என்ற கேள்விக்கு, ஒரு அரசின் மீது குறை  கூறக் கூடாது, விமர்சிக்கக் கூடாது என்பதல்ல பிரச்சனை.  மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. ஆனால் வேறு ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் தமிழக அரசை விமர்சிப்பதற்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது.  போகிற போக்கில் செய்தியாளர்களிடம் எதையாவது கூறிவிட்டுச் செல்வது நல்ல நடைமுறையல்ல என்றார். பால் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை மக்கள் மீது சுமை ஏற்றுகிற எந்த  ஒரு நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே  தமிழக அரசு மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வு என எதுவாக இருந்தாலும் மக்கள் மீது சுமைகளை திணிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு 3 இடங்களில் நடத்தியுள்ளார்களே என்ற கேள்விக்கு,  ஆ.எஸ்.எஸ்.சை பொறுத்தவரை காவல் துறை கட்டுப் பாட்டை ஏற்க மாட்டார்கள். பேரணிக்கு அனுமதி அளித்த நீதிமன்ற விதிக்கும் கட்டுப்பாடுகளையும் ஏற்க மாட்டோம். எங்கள் விருப்பப்படிதான் நடப்போம் என்பதை எப்படி ஏற்க முடியும். ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவெறி அமைப்பு என்ப தால் தான் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவித்தோம் என்றார்.