ஆப்பிரிக்க நாடான எத்தி யோப்பியாவில் 2020 நவம்பர் முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெறுகிறது. டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி, அரசின் தளங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. எதியோப்பியா அரசு படைகள் திருப்பித் தாக்கின. அரசு போர் நிறுத்தம் அறிவித்தது. இது விவ சாய வேலைகள், பயிர் நடும் வேலை களுக்காக அறிவிக்கப்பட்டது. ஆனா லும் விடுதலை முன்னணி தாக்குதல் நடத்தி பெரும் சேதாரங்களை விளைத்தது. பெரும்திரளானோர் குவியல் குவியலாக புதைக்கப் பட்டனர். பாலியல் பலாத்காரங்கள் அரங்கேறின. ஆனால் அதிகா ரப்பூர்வ தகவல் இல்லை. பல தோல்விகளை சந்தித்த பிறகு விடு தலை முன்னணி தனது படைகளை வாபஸ் பெற்றுள்ளது. அரசும் அமை தியை விரும்பும் நிலையில், எத்தி யோப்பியாவில் அமைதி திரும்பும் வாய்ப்பு உள்ளது. டைக்ரே மக் கள் விடுதலை முன்னணியை அமெ ரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் பல பத்தாண்டுகளாக ஆதரிக்கின் றன. எதியோப்பியா மீது பொருளா தார தடைகள் விதிக்க அமெரிக்கா மிக ஆர்வமாக உள்ளது. இத்தடைகள் எதியோப்பியாவில் சிறு தொழில் களை, சாதாரண உழைப்பாளிகளை பாதிக்கும்.