6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ்
சென்னை, அக்.4- மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 6 குழந்தைகள் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தன. காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்ட அந்த குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்படி மருந்துகள் வழங்கப் பட்டன. அதன் பின்னர் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்தன. இது குறித்து மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குழந்தைகள் உட் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தமிழக மருந்துக் கட்டுப் பாட்டு துணை இயக்குநர் குருபாரதி தலை மையிலான குழுவினர், குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். சம்பந்தப் பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, தமிழக மருந்து கட்டுப் பாட்டு துணை இயக்குநர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத் திற்குப் பின் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எச்சரிக்கை கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தை களுக்கு பயன்படுத்த வேண்டாம் என சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விசா ரணை முடிந்த பிறகு இருமல் மருந்து தொடர்பாக விரிவான தகவல் தெரிவிக்கப் படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
