tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிவாரணம் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் அருகே வெடிபொருள் தொழிற் சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த வரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவா ரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்

. ‘ஏமாற்று வார்த்தைகள் வேண்டாம்’

சென்னை: “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்கு கிறார் எனக் கூறி, வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள்  முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து. இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன சொல்லப் போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி., தொகுதிகளின் எண் ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்க ளுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதி நிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது  என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித் ஷா” என்று தனது எக்ஸ் தளத்தில் தயாநிதி எம்.பி.,  பதிவிட்டுள்ளார்.

அரசுப் பேருந்துகளில்  1.66 லட்சம் பேர் பயணம்

சென்னை: பக்ரீத், வார விடுமுறை நாட்கள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை(ஜூன்13) முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அரசு, தனியார் பேருந்துகள், ரயில்களில் கூட்ட  நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில்  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட 3,028 அரசுப் பேருந்துகளில் 1,66,540 பேர் பயணித்துள்ள தாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

குருமூர்த்தி-ராமதாஸ் மீண்டும் சந்திப்பு!

சென்னை: பாமகவில் கூட்டணி விவகாரத்தில் தந்தை-மகன் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலை தொடர்ந்து, இரு வரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகி கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கடந்த ஜூன் 5 ஆம் தேதி  தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். சில மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு வெறும் நட்பு ரீதியிலானது என குருமூர்த்தி தெரிவித் திருந்தார். இந்நிலையில், சென்னை வந்திருந்த ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் மகன் இல்லத்தில் இந்த சந்திப்பு  நடந்தது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு, தைலாபுரத்தில் இதற்கான விளக்கம் தருவ தாக தெரிவித்துள்ளார்.

அது பொய்க் கனவு

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி யிருந்தார். எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலடி கொடுக் கும் விதமாக சென்னையில் பொதுப் பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமிதான் ‘200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று  அதிமுக ஆட்சி அமைக்கும்’ என பொய் கனவு கண்டு வரு கிறார்” என்றார்.

கவுன்சில் மறுசீரமைப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி தலைமையில் 23 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் கதிர் ஆனந்த், தஞ்சை முர சொலி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கவுன்சிலில் இடம் பெற்று உள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி அமைக்கப் பட்டுள்ள கவுன்சில் நுகர்வோர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்.

3 மாதங்களில் கூட்டணி முடிவு

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மரு.ராமதாஸ், “விரைவில் நல்ல செய்தி வரும்; நல்ல செய்திக்காக காத்திருப்போம். அரசியலுக்கு வயது கிடையாது. எல்லா தலைவர்களையும் நான் நேசிப்ப வன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர்; தமிழ்நாடு  வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்துக்கள்.  பா.ம.க. கூட்டணி குறித்து இரண்டு, மூன்று மாதங்களில் முடிவு  தெரிவிக்கப்படும். தேசிய கட்சியோடு இருக்கலாம் அல்லது மாநில கட்சியோடு பாமக கூட்டணி இருக்கலாம்” என்றார்.

ஒன்றிய அரசு பதற்றமாக உள்ளது அமைச்சர் சாடல் பெரம்பூர்: “

தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்ப தற்கு அமித் ஷாவின் வருகையே ஒரு எடுத்துக் காட்டு” என சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் மற்றும் பட்டா ளத்தில் உள்ள 40 ஆண்டு  பழமையான சிவசுப்பிர மணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

முதல் ரத்த சாட்சி

தமிழக வாலிபர் இயக்கத்தின் முதல்  ரத்தசாட்சி சீராணம்பா ளையம் வி.பழனிச்சாமி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் முன்னத்தி ஏரான சோசலிஸ்ட் வாலி பர் முன்னணியின் துடிப்பு  மிக்க தோழன்.  திருப்பூர் இடுவாய் பஞ்சாயத்து விசைத்தறி தொழிலாளர்களின் போ ராட்டத்தை உறுதியாக ஆதரித்து உழைத்தவர். அ.தி.மு.க. விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் துரோக ஒப்பந்தத்தை எதிர்த்து களமாடியவர். அதன் விளைவாக அப் பகுதியில் செங்கொடி இயக்கம் வேர்விட்டு பரவு வதை பொறுத்துக் கொள்ள  முடியாமல் 1979  ஜுன் மாதம் 9 ஆம் தேதி  அவரை சமூக விரோதி கள் வெட்டிப் படு கொலை செய்தனர்.

இன்று பல்துறை ஆய்வுக் கூட்டம்

சென்னை: முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலை மைச் செயலகத்தில், திங்க ளன்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. நெடுஞ்சாலை, பதிவுத் துறை, கூட்டுறவு ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடை பெற உள்ளது. அமைச் சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி,  சக்கரபாணி, பெரிய கருப்பன், துறை அதிகாரி கள் பங்கேற்க உள்ள னர். பேரவையில் அறி விக்கப்பட்ட திட்டங்களின்  நிலை, செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி  முதலமைச்சர் அறிவுறுத் தல்களை வழங்க உள் ளார்.

ஆடை கட்டுப்பாடு: டிஜிபி

சென்னை: சென்னையில் உள்ள  தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக காவல்துறை யினருக்கு ஆடை கட்டுப் பாடு விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார்.