tamilnadu

img

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தின் முதன்மை எதிரி

திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை

திண்டுக்கல், ஜுன் 29 - மதவெறி பாஜகவுடன் அதிமுக  கூட்டணி வைத்திருப்பது அக்கட்சிக்கும் ஆபத்து; தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கத்தின் போது தாக்குதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி குண்டர்களை கண்டித்தும், தாக்குதலுக்குள்ளான மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜுன் 28  சனிக்கிழமை மாலை திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) விடு தலை ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்  ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு:

அரசியல் சட்ட உரிமைகளை மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை

இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு அடிப்படை உரி மைகளை வழங்கியுள்ளது. கருத்து ரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடுகிற உரிமை, போராடு கிற உரிமை ஆகியவற்றை அரசியல்  சாசனம் வழங்கியுள்ளது. அதை ஒழுங்குபடுத்துகிற அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியுள்ளது. ஆனால் மறுக்கிற அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கவில்லை.  தமிழ்நாட்டில் பல போராட்டங் களுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதில்லை. இது உட்பட, மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி  கடந்த ஜூன் 11 முதல் 20 வரை மாநிலம்  முழுவதும் பிரச்சாரம் செய்ய முடி வெடுத்தோம். நூற்றுக்கணக்கான குழுக்கள் கலந்து கொண்டு லட்சக் கணக்கான மக்களைச் சந்தித்து மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து,  தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக் காக இந்த பிரச்சார இயக்கம் வெற்றி கரமாக நடைபெற்றது.

தாடிக்கொம்பு சம்பவம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிப் பிரச்சாரத்தின் இறுதி நாளில் தாடிக்கொம்பில், எங்கள் தோழர்களை முதலில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான் தாக்கினார்கள். அதனால் தான்  நாங்கள் தற்காப்புக்காக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தாக்கு வதும், தற்காத்துக் கொள்வதும் சமமான விஷயமா என்பதை தமிழ்நாடு  காவல்துறைக்கு கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.  எங்கள் தோழர் சரத்குமாரை இந்து முன்னணியினர் கழுத்துப் பிடித்து  நெரிக்கிறார்கள். இங்கே வேடிக்கை  பார்க்க முடியுமா?  காவல்துறை தாக்கியவரையும், தற்காத்துக் கொள்ள முயன்றவர் களையும் ஒரே சமமான தட்டில் வைத்துப் பார்த்து இந்த பக்கம் 8 பேர்  கைது, அந்த பக்கம் 8 பேர் கைது  என்று செய்துள்ளது. இது சரியல்ல. பொதுவாகவே புகார் கொடுத்தால், எதிரியிடமும் புகாரைப் பெற்று இரண்டு தரப்பின் மீதும் வழக்கு போடுவதும், பின்னாளில் சமரசம் செய்துகொள்வதும் என்கிற ஒரு  நடைமுறையை தமிழக காவல்துறை வழக்கமாகவே வைத்துள்ளது. நடந்த சம்பவங்கள், அதற்கான சாட்சிகள், ஆதார ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கைப் போடுவதற்கு பதிலாக நீங்கள் ஒரு புகாரைக் கொடுங்கள், அவர்கள் ஒரு புகாரை கொடுத் திருக்கிறார்கள் என்று காவல்துறையே  கேட்டு வாங்கிப் போட்ட வழக்கு களெல்லாம் தமிழ்நாட்டில் உள்ளன. எங்கள் தோழர்கள் மீது போடப் பட்ட வழக்கை திரும்பப் பெற  வேண்டும் என்று இந்த பொதுக் கூட்டம் வாயிலாக தமிழ்நாடு அர சாங்கத்தை, காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் காரல் மார்க்சின் வாரிசுகள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  நூற்றாண்டு கால வரலாற்றில் எத்த னையோ எதிரிகளை சந்தித்திருக் கிறோம். நாங்கள் காரல் மார்க்சின்  வாரிசுகள். நாங்கள் முடிவெடுத்து விட்டால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை எச்சரிக் கையாக தெரிவிக்கிறேன். வலதுசாரிகளை எதிர்ப்பதற்கு வலுவான கொள்கை பலம் கொண்ட வர்கள் இடதுசாரிகள். ஆகவே தான்  இடதுசாரிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வலதுசாரிகளை கண்டிப்பது,  எச்சரிப்பது, எதிர்கொள்வது என்ற முறையிலே தான் இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது  முறையாக வழக்கு பதிவு செய்து  கைது செய்து வழக்கு நடத்த  வேண்டும். ஆனால் காவல்துறை யில் கூட சில அதிகாரிகள் இது  போன்ற வலதுசாரி சிந்தனைகளுக்கு ஆட்பட்டு ஆதரவான போக்கில் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

எந்த இயக்கத்திற்கும்  தடை கோர மாட்டோம்

இது கருத்துரிமை சார்ந்தது. மாற்றுக்கருத்து இருக்கிறது என்று  சொன்னால் நீங்கள் மேடை போட்டு  பேசுங்கள். காவல்துறை அனுமதி  மறுத்தால், உங்களுக்கு காவல்துறை  அனுமதி வழங்க வேண்டும் என்று  தான் போராடுவோமே தவிர உங்க ளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று ஒருபோதும் சொல்ல மாட்டோம். எந்த ஒரு இயக்கத்தை யும் தடை செய்ய வேண்டும் என்று  கோருபவர்கள் அல்ல நாங்கள்.

இந்திய மக்களுக்கான விடியல்  கம்யூனிச தத்துவம் தான்

எங்கள் கொள்கையில் நம்பிக்கை  இருக்கிறது. இந்த நாட்டு மக்க ளுக்கு விடியலை, முன்னேற்றத்தை  ஏற்படுத்துகிற கொள்கை கம்யூ னிசம் தான் என்பதில் ஆழமான உறுதிப்பாடு உள்ளவர்கள் நாங்கள்.  பாதகம் செய்பவரைக் கண்டால் பயங் கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி  மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில்  உமிழ்ந்துவிடு பாப்பா என்றான் பாரதி. இது தான் எங்களின் வரலாறு.  வழி.

முருகன் மாநாடு குறித்து

மதுரை முருகன் மாநாட்டுக்கு வந்தவர்கள் ‘முருக பக்தர்கள்’ அல்ல, மோடி பக்தர்கள். பாஜக சார்பில்  திரட்டப்பட்ட கூட்டம் தான் அது.  ஆண்டாண்டு காலமாக அறுபடை வீடுகளுக்கும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கிருத்திகை ஆகிய திருவிழாக்களுக்கு முருக பக்தர்கள் சென்றுகொண்டு தானி ருக்கிறார்கள். முருகன் கோவில் களில் எந்த திருவிழாவிற்கும் பல லட்சக்கணக்கானவர்கள் கூடுவது இயல்பு. அதற்கு யாரும் வண்டி வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இலவச ஆட்டோ விட வேண்டிய அவசியமில்லை. சென்னையிலிருந்து இலவசமாக ரயில் விட வேண்டிய அவசிய மில்லை. இவை இல்லாமலே முரு கன் கோவிலுக்கு மக்கள் சென்று வரு கிறார்கள். ஆனால் பாஜக -  ஆர்எஸ்எஸ் கூட்டம் எப்படி மாநாட் டுக்கு ஆள் திரட்டினார்கள்? வாகனம் ஏற்பாடு செய்கிறோம், இலவச ஆட்டோ நிறுத்தி வைத்துள்ளோம், சென்னையிலிருந்து ரயில் விடு கிறோம் என்று வலிந்து வலிந்து அழைத்தும் எதிர்பார்த்த கூட்டம் மதுரை அம்மா திடலுக்கு வரவில்லை.

ஆகம விதிகளை ‘காக்கும்’ நீதிபதிகளே எங்கே போனீர்கள்?

ஆகமவிதிப்படி தான் அறுபடை  வீடு முருகன் சிலைகள் அமைக்கப் பட்டிருந்ததா? பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் ஆலயத் திற்குள் நுழைய வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்  ஆக வேண்டும் என்று போராடுகிற போதெல்லாம் ஆகம விதிகளை  சுட்டிக்காட்டித் தான் நீதிமன்றங்கள்  அனுமதி மறுக்கிறார்கள். கரு வறைக்குள் செல்ல அனுமதியில்லை.  ஏன் என்றால், ஆகம விதிகள் அதற்கு  அனுமதிப்பதில்லை என்பதை வழக்கமாகவே நீதிபதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா திடலில் அமைக்கப்பட்ட அறுபடை  வீடுகளும் முருகன் சிலைகளும் ஆகம விதிகள்படி தான் அமைக்கப் பட்டதா? இப்போது அந்த நீதிபதி கள் எங்கே போனார்கள்?  

சட்டமன்ற தேர்தலையொட்டி நடந்த முருகன் மாநாடு

இந்து வாக்காளர்கள் அனை வரும் ஒருங்கிணைந்து இந்து  வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை முருகன் மாநாட்டில் நிறைவேற்றி யுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட் டுக்கும் 2026 சட்டமன்றத் தேர்த லுக்கும் என்ன சம்பந்தம்? நிபந்தனை  அடிப்படையில் தான் உயர்நீதி மன்றம் மாநாட்டுக்கு அனுமதி கொடுத்தது. மாநாட்டுக்கு அனுமதி வேண்டும்  என்று இந்து அமைப்புகள் யாரும்  நீதிமன்றம் போகவில்லை. அறுபடை  முருகன் சிலைகள் வைக்க காவல் துறை அனুமதி மறுக்கிறது என்று  தான் நீதிமன்றத்திற்கு சென்றார் கள். ஆனால் நீதிமன்றத்தில் காவல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்கிற போது மாநாட்டிற்கு 3 நாட்களில் அனுமதி தருகிறோம் என்று காவல்துறையினர் சொன்னார் கள். இந்து முன்னணியினரே மாநாட்டுக்கு அனுமதி கேட்கவில்லை.  காவல்துறை ஏன் மாநாட்டுக்கு அனுமதி தருகிறேன் என்று சொல் கிறீர்கள்? நீதிமன்றம் ஆன்மீகம் மட்டும் பேச வேண்டும், அரசியல் பேசக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.  ஆனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பவன்கல்யாண் உட்பட யாருமே இந்த நிபந்த னையை கடைபிடிக்கவில்லை. ஆனால் நீதிமன்றத்துக்கு கோபம் வர வில்லை. நாங்கள் எதன் அடிப்படை யில் நிபந்தனைகள் விதித்தோம், எதன் அடிப்படையில் நீங்கள் நிபந்த னையை மீறினீர்கள் என்று சொல்லி மாநாட்டை நடத்திய ஏற்பாட்டா ளர்கள் மீது சட்டப்படியாக நடவ டிக்கை எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா?

 அதிமுக பற்றி

அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்த  போது ஒரே நாளில் தினத்தந்தி, தின மலர் என இரண்டு இதழ்களில் முழுப் பக்க பேட்டி. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி  தான் என்று அமித்ஷா பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால் முதல மைச்சராக அதிமுக தலைவர்கள் தான் இருப்பார்கள் என்றார். எடப்பாடி பழனிசாமி பெயர் அமித்ஷாவுக்கு மறந்து போனது போலும். அமித்ஷா அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்திருந்தார். மீண்டும் அமித்ஷா சொன்னார், கூட்டணி ஆட்சி தான் என்று. ஆனால் பாஜக தலைவர் எச்.ராஜா  சொல்கிறார், முதலமைச்சர் யார் என்று பாஜகவின் ஆட்சி மன்றக் குழு  தான் முடிவு செய்யுமே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியெல்லாம் முடிவு  செய்ய முடியாது என்று. முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியாரை இழிவுபடுத்தி வீடியோ ஓடிக்கொண்டிருந்த போது கள்ள மவு னம் காத்த  அதிமுக தலைவர்கள்  இப்போது புது விளக்கம் அளித்தி ருக்கிறார்கள். வீடியோ முன்னால் ஓடிக்கொண்டிருந்தது; நாங்கள் பின்னாடி அமர்ந்திருந்தோம்; என்ன  ஓடிக்கொண்டிருக்கிறது என்று எங்க ளுக்கு தெரியவில்லை. மறுநாள் தான் எங்களுக்கு தெரியவந்தது என்று  ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சரி, இந்த பிரச்சினை தெரிய வந்ததும் உடனடியாக கண்டித்தீர் களா? முருகன் மாநாடு 22-ம் தேதி நடந்தது. 26-ம் தேதி தான் எடப்பாடி  பழனிசாமி கண்டித்தார். ரொம்ப யோசித்திருப்பார் போல் தெரிகிறது.  இது குறித்து கண்டித்தால் அமித்ஷா, மோடி கோபித்துக்கொண்டால் என்ன செய்வது? இதை நாம் கண்டிக்கப் போனால் அங்கிருந்து அமலாக்கத்துறை வந்தால் என்ன செய்வது? எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளலாமா? என்று நினைத்திருப்பார் போலும். முதலில் கூட்டணி தான்; கூட்டணி  ஆட்சியில்லை என்றீர்கள். இப்போது முதலமைச்சரையே நாங்கள் தான்  முடிவுசெய்வோம் என்று பாஜக வினர் சொல்லிவிட்டார்கள். போகிற  போக்கில் அதிமுகவிற்கு எத்தனை சீட்டு என்று அமித்ஷா தான் முடி வெடுப்பார் போல தெரிகிறது. அந்த கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி. எல்லாவற்றையும் பாஜக தீர்மானிக்கும், முதலமைச்சர் யார் என்று தீர்மானிப்பார்கள் என்றால் அதிமுகவிற்கு அந்த கூட்டணியில் என்ன வேலை?

அதிமுக உணர வேண்டும்

இடதுசாரிகளாகிய நாங்கள் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில்  பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற வகுப்புவாத சக்திகள் காலூன்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.  பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஐ கொண்டு வந்து மதவாதம் பலமடைவதற்கு யார் செயல்பட்டாலும் அது தமிழ்நாட் டின் மக்களுக்கு எதிரானது, மக்கள்  ஒற்றுமைக்கு எதிரானது, முற்போக்கு  கலாச்சாரத்துக்கு எதிரானது என்பதை அதிமுக உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.