வசிரிஸ்தான் தாக்குதலில் தொடர்பு இல்லை
பாகிஸ்தான் கூற்றுக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வட வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்ந் தது. வெடிபொருள் நிரப்பப்பட்ட வாக னம் ராணுவ கான்வாய் மீது மோதியதில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 குழந்தைகள் உட்பட 20-க்கும் பலர் காயமடைந்தனர். இதில் 4 வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயு தக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இத னையடுத்து, பாகிஸ்தானின் குற்றச் சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்ச கம் மறுப்பு தெரிவித்ததோடு, கண்டன மும் வெளிப்படுத்தியுள்ளது.