tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணா

சொன்னதை சொல்பவை அல்ல, கிளிப்பிள்ளைகள்!

கிளிகள் பல சிறப்பு திறமைகள் கொண்டனவாம். கருவிகளை பயன்படுத்துவது அதில் ஒன்று.  மனித உரையாடலை திரும்பச் சொல்வது மட்டு மல்ல, சில நேரங்களில் அதை புரிந்து கொள்ளவும் செய்கின்றனவாம். அவற்றில் சில இனங்கள் மூடப்  பட்ட குப்பை தொட்டிகளை திறப்பது போன்ற சிக்க லான புதிர்களை விடுவிக்கவும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதையும் செய்கின்றன. குரங்கு களில் காணப்படும் இத்தகைய திறமைகளை கொண்டி ருப்பதால் கிளிகளும் காகங்களும் ‘சிறகுகள் கொண்ட  குரங்குகள்’ என அழைக்கப்படுகின்றன. அறிவுத் திறமை என்பதை பருண்மையாக வரையறுப்பது கடி னம். ஆனாலும் அறிவியலாளர்கள் மனிதர்களுக்கு மட்டுமே சிறப்பாக உள்ள மேம்பட்ட கற்றல், நினைவு,  கவனம் மற்றும் அசைவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை  முன்னேறிய அறிவுத் திறனாக காட்டுகிறார்கள். இவை  எல்லாம் கிளிகள், காகங்கள், சிம்பன்ஸி டால்பின், யானை ஆகிய இனங்களில் காணப்படுகின்றன. கிளிகளின் மூளை எளிமையானது. மேலும்  மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் பொதுவான மூதா தையர்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வர்கள். எனவே மனித அறிவுத் திறன் குறித்து ஆய்வு செய்வதற்கு கிளிகள் பொருத்தமற்றவை எனத் தோன்  றும். ஆனால் பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த  பெப்பர்பெர்க் என்கிற ஆய்வாளர் நடத்திய நீண்ட ஆய்வில் கிளிகளின் மொழித் திறமை, வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அவற்  றின் திறமை சுட்டிக்காட்டப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மனித அறிவுத்திறனை ஒத்த திறமை எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதை  காட்டுகின்றன. அலகுடைந்த கிளி ஒன்று தன் நாவினால் கூழாங்கற்களை பொறுக்கி எடுத்து உணவை உடைக்கி றது. ஹயாகிந்த் மக்காவ் எனும் இனக் கிளிகள் உணவை சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்கு  சிரிய மரத்துண்டுகளை அலகிலோ அல்லது கால் களிலோ வைத்துக் கொள்கின்றன. பாம் காக்டூஸ் எனும் இனம் தன் இணையைக் கவர்வதற்காக முருங்  கைக்காய் போன்ற உருவத்தை செதுக்கின்றனவாம். காஃபின் காக்டூஸ் இனக் கிளிகள் ஒரு தனித்த கருவி எந்த தொகுதியை சேர்ந்தது என்பதை அடையா ளப்படுத்துமாம். இது சிம்பன்ஸி மற்றும் மனிதர்களைத்  தவிர வேறு எந்த இனமும் அறியாதது. மனிதக் குழந்தை களிடம் செய்யப்படும் மார்ஷ்மெலோ சோதனை, கிளி களில் செய்யப்பட்டபோது அவையும் மனிதர்களைப் போலவே சிறந்த பரிசு அல்லது கூடுதலானது கிடைக்  கும் என்றால் அதற்காக காத்திருந்தன. இது சுய கட்டுப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

செவ்வாய்க் கோளில் ஏரிகளும் ஆறுகளும் இருந்தனவா?

செவ்வாய்க்கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட நாசாவின் பெர்சிவியரன்ஸ் ஊர்தியில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் அங்கு ஒரு காலத்தில் ஏரிகளும் ஆறுகளும் இருந்ததற்கான ஆதாரங்களை காட்டியுள்ளது. செவ்வாய்க் கோளில் விண்கல்லால் ஏற்பட்ட ஜெசீரோ எனும் பள்ளத்தில் வண்டல் படிவங்கள் காணப்படுகின்றன. நீர் நிறைந்து காணப்படும் இப்பள்ளம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏரி சுருங்கி வற்றி வண்டல் படிவங்கள் இப்போது காணப்படும் நிலவியலாக உள்ளது. அங்கிருந்து கற்களும் மண்ணும் எடுத்து வந்து ஆய்வு செய்யப்படும்போது அங்கு உயிரினங்கள் இருந்தனவா என்பது தெரியவரும்.