tamilnadu

img

கொள்ளையர்களை விரைவில் நெருங்கி விடுவோம்

திருவண்ணாமலை,பிப்.13- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை இரண்டு மூன்று நாட்களில் நெருங்கிவிடுவோம் என  வடக்கு மண்டல ஐஜி  கண்ணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந் திரங்களை வெல்டிங் எந்தி ரம் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் நாடு முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்கள் தான் இந்த  சம்பவத்திலும் ஈடுபட்டி ருப்பது தெரியவந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளைய டிக்கப்பட்ட அனைத்து ஏடிஎம் மையங்களில் அதிகாலை 2 - 4 மணி முதல்  நடைபெற்றுள்ளது. ஒரே  கும்பல் தான் இந்த கொள் ளையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவம் மகா ராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்,  ஒடிசா, அசாம் ஆகிய பகுதி களில் நடைபெற்றுள்ளது. தற்போது ஐந்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் கள் தலைமையில் 9 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ஐந்து  டிஎஸ்பிக்கள் தலைமையி லும் விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த நபர்கள்  தொழில்நுட்ப ரீதியாக விவரம் அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத் தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று  நாட்களில் கொள்ளையர் களை நெருங்கி விடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.