அரசியல்மயப்படாத தலைமையும், ரசிகர் மனநிலையில் தொண்டர்களும்
தமிழக வெற்றிக் கழகம், குறிப்பாக அதன் தலைவர் விஜய், தன்னை முழுமையாக அரசியல்மயப்படுத்திக் கொண்டும், தனது ரசிகர் கூட்டத்திற்கு அரசியல் ஒழுங்குமுறைகளையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் புரிய வைப்பதே தீர்வாக இருக்கும்.
நடிகர் விஜய் தலைமையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தேர்தல் பரப்புரை யைத் தொடங்கிய சில நாட்களிலேயே, கரூரில் நடந்த விரும்பத்தகாத உயிரிழப்பு சம்ப வங்களால் பெரும் அதிர்வலைகளை ஏற்ப டுத்தியது. கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது எனத் தவெக கேள்வி எழுப்பிய நிலையில், உண்மையில் விஜய் பங்கேற்ற நாமக்கல், விக்கிரவாண்டி, மதுரை, திருவாரூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களும், குளறு படிகளும் அரங்கேறியுள்ளன என்பது நிதர்ச னமான உண்மை. இதனை புள்ளி விபரங்க ளாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட ஆவ ணம் சாட்சி. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, நாமக்கல் மற்றும் கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற் கொள்வார் என அறிவிக்கப்பட்டது. நாமக்கல் லில் காலை 8.45 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் வந்தது மதியம் 2.30 மணிக்குத்தான். இந்தக் காலதாமத மும், முறையான ஏற்பாடுகள் இல்லாததுமே நாமக்கல்லில் குழப்பங்களுக்கு வழிவகுத்தன. வார விடுமுறை தினம் என்பதால், கல் லூரி மாணவர்கள், பள்ளிச் சிறுவர்கள் என மிகக் குறைந்த வயதினர் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் காலை 7 மணிக்கே நாமக் கல் - சேலம் சாலையில் கூடினர். உளவுத்துறை யின் கணக்குப்படி, குறுகிய இடத்தில் கிட்டத் தட்ட 15,000க்கும் மேற்பட்டோர் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். கூட்டத்தின் காரணமாக நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள சுமார் 80 சதவிகித கடைகள் மூடப்பட்ட தால், அன்றாட வாழ்வாதாரத்தை வியாபாரி கள் இழந்தனர். காலை 7 முதல் 9 மணி வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு நிர்வாகிகள் அவரவர் வேலை யைப் பார்க்கச் சென்றுவிட்டனர். உணவு, கழிப்பிட வசதி ஏதும் செய்யப்படாததால், அதி காலையில் இருந்து காத்திருந்த கூட்டம், கொளுத்தும் வெயிலில் சோர்வடைந்தது. விஜய் வருவார் எனப் பல மணி நேரம் காத்திருந்த நிலையில், அரசியல்மயப்படாத ரசிகர் மனநி லையில் இருந்த தொண்டர்கள் சாகசங்களைச் செய்ய துவங்கினர். உயரமான கட்டிடங்கள், கடைகளின் கூரைகள், பிளக்ஸ் பேனர்களுக் காக வைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்தனர். விஜய் பேசிக் கொண்டிருந்த போதே தனியார் மருத்துவமனையின் முன் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததும் குறிப்பிடத் தக்கது. போதிய குடிநீர் வசதி இல்லாததாலும், நீண்ட காத்திருப்பு மற்றும் கூட்ட நெரிசலாலும் பெண்கள் உள்ளிட்ட பலர் மயக்கம் அடை யத் துவங்கினர். 40க்கும் மேற்பட்டோர் மயக்க மடைந்தனர்; படுகாயம் அடைந்த ஒரு பெண் மணி சேலம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மதியம் 2.30 மணிக்கு தாமதமாக வந்த விஜய், வாகனத்தை நெருக்கித் தள்ளிய கூட் டத்தின் காரணமாக, குறிப்பிட்ட எல்லையை அடைய முடியாமல் 50 மீட்டர் முன்பாகவே நின்று பிரச்சாரத்தை மேற்கொள்ள நேரிட்டது. அவர் பேசத் துவங்கிய உடனேயே அங்கிருந்து கூட்டம் வெளியேறத் துவங்கியது. எனினும், ஆம்புலன்ஸ் மூலம் மயக்கமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் நிகழ்வு நாமக்கல்லிலும் அரங்கேறியது. போர்க்களம் போல்!? நாமக்கல்லில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு தான், கரூரில் பலர் மயங்கி விழுந்து உயிரி ழந்த துயர சம்பவம் நடந்தது. கரூரில் ஏதோ எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு சதி செய்தது போலவே தவெக நிர்வாகிகளும், எதிர்க்கட்சி யினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கரூருக்கு முன்பாகவே நாமக்கல் உள் ளிட்ட பல மாவட்டங்களிலும், விஜயின் தாமத மான வருகை, அரசியல்மயப்படாத நிர்வாகி கள், இளம் வயது ரசிகர்களின் ஒழுங்கு படுத்தப்படாத ஆர்ப்பாட்டம், சம்மந்தமே இல்லாமல் காவலர்களுடன் சண்டைக்குச் செல் லும் செயல்கள் போன்றவை பல இடங்களில் நடந்தேறியுள்ளன. நாமக்கல்லில் கூட்டம் நிறைவடைந்த பிறகு, நாமக்கல்-சேலம் சாலை போர் நடந்த பகுதி போல காட்சியளித்தது. இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் நடந்திராத ஒரு விசித்திர மான சம்பவம் தவெக கூட்டங்களில் நடந்தது. தங்கள் கட்சியின் பிளக்ஸ் பேனர்களை சொந்த கட்சியினரே கிழித்தெறிந்ததும், மூங்கில் கம் பங்களை சாலையில் வீசிச்சென்ற சம்பவங்க ளும் அரங்கேறியது. நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகளும், கிழிந்த கட்சித் துண்டுகளும் குவியல் குவியலாகக் கிடந்தன. உண்மையான கட்சித் தொண்டன் ஒருபோதும் தன் கட்சி யின் பிளக்ஸை கிழிக்கவோ, கட்சித் துண்டைத் தரையில் போட்டு மிதிக்கவோ மாட்டான். இந்தக் காட்சிகள் சட்டென கூடிச் சிதறும் ரசிகர் கூட்டத்தை மட்டுமே பிரதிபலிப்பதாக உள்ளது. கூடியிருந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 45 சதவிகி தம் பேர் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் மட்டுமே என்றும், அவர்களுக்கு ‘விஜய்’ மற்றும் ‘தவெக’ என்பதைத் தவிர வேறு எந்த அரசியல் புரிதலும் இல்லை. நடிகர் விஜய் வந்து போன பிறகு, நாமக் கல் சாலை, போர்க்களம் போல காணப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் காவல்துறை சார்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்தத் தொடர் அசம்பாவிதங்கள் அனைத் தும், அரை சதவீதம் கூட அரசியல்மயப்படாத, அரசியல் புரிதல் இல்லாத தலைவர் மற்றும் அவர் பின்னால் இருக்கும் ரசிகர் மனநிலையி லுள்ள இளைஞர்கள் ஆகியோரின் விளை வாகவே நடப்பதாக, நாமக்கல் மாவட்ட அரசி யல் நோக்கர்கள் தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் இத்தகைய மோசமான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், தமிழக வெற்றிக் கழகம் குறிப்பாக அதன் தலைவர் விஜய், தன்னை முழுமையாக அரசியல்மயப்படுத்திக் கொண் டும், தனது ரசிகர் கூட்டத்தை அரசியல் ஒழுங்குமுறைகளையும், பாதுகாப்பு நெறி முறைகளையும் புரிய வைப்பதே தீர்வாக இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய துயரத் திற்கு பிறகும், மூன்று நாட்கள் கழித்து வெளி யிட்ட கானொளியில் கூட, நடிகர் விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு ஆறுதல் தெரிவித்தோ, சம்பவத்திற்கு பொறுப்பேற்றோ ஒரு வரி கூட சொல்லாமல், அடுத்தவரை குற்றம் சாட்டுவதில் மட்டுமே குறியாய் இருக்கிற ஒரு தலைவனால், இது சாத்தியமா என்பதை காலம்தான் பதில ளிக்கும். -எம்.பிரபாகரன்
