போர் வேண்டாம்....! அமைதி வேண்டும்...!! வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர இனவெறி யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதனை மயிலாடுதுறையில் வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் எம். ஐயப்பன், மாவட்டச் செயலாளர் ஏ. அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.