tamilnadu

img

போர் வேண்டாம்: ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

போர் வேண்டாம்: ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, ஜுன் 1-  பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திற்கு எதிராகவும் போர் வேண்டாம் என்கிற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க நிர்வாகி என்.கண்ணம்மாள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றினர். முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் இரா.மகாதீர் நிறைவுரையாற்றினார். முன்னதாக நகரப் பொருளாளர் ராமு வரவேற்க, நகரச் செயலாளர் தீபக் நன்றி கூறினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஏராளமானோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.  கரூர்  வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, ஜவகர் பஜார் ஆகிய பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது‌.  கையெழுத்து இயக்கத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சதீஸ் தலைமை வகித்தார். கரூர் மாநகராட்சி 41 ஆவது வார்டு  உறுப்பினர் எம். தண்டபாணி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்துப் பேசினார். துணைத் தலைவர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜீவ்காந்தி, ரஞ்சிதா, சூர்யா, ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் ஆர்வமுடன் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அரவக்குறிச்சி ஒன்றியம்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரவக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் அரவக்குறிச்சி பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தயாநிதி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டத் துணை தலைவர்கள் சி.ஆர்.ராஜாமுகமது, கே.வி.கணேசன், எம்.ஆறுமுகம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்துப் பேசினர். வாலிபர் சங்க மாவட்டத் துணை தலைவர் ரஞ்சிதா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.