tamilnadu

img

சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை

சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை

நீதிமன்றத்தில் தகவல்

மதுரை, செப்.26 - சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட வில்லை என உயர்நீதி​மன்​றத்​தில் தெரி விக்​கப்​பட்​டது.  நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறு நீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ர ணைக்கு உத்​தர​விடக் கோரி பரமக்​குடியை  சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை  கிளையில் மனுத் தாக்​கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்ககெனவே விசா​ர ணைக்கு வந்​த​போது, தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற சிறுநீரகம் மற்​றும் உடல் உறுப்​பு​ கள் திருட்டு தொடர்​பாக விசா​ரிக்க தென் மண்டல ஐ.ஜி. பிரே​மானந்த் சின்ஹா தலை​ மை​யில், மாவட்ட காவல் கண்​காணிப்​பா ளர்​கள் நிஷா, சிலம்​பரசன், கார்த்​தி​கேயன்,  அரவிந்த் ஆகியோர் அடங்​கிய சிறப்பு படை  அமைத்து உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.  மனு​தா​ரர் தரப்​பில், சிறுநீரக திருட்டு தொடர் ​பாக உயர் நீதி​மன்​றம் நியமனம் செய்த சிறப்பு விசா​ரணைக் குழு விசா​ரணை​யில், எந்த  முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை. இதனால் சிபிஐ விசா​ரணை கோரி உச்சநீதி​மன்​றத்​தில்  மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. மனு நிலு​வை​யில் உள்​ளது எனத் தெரிவிக்​கப்​பட்டது. இதையடுத்து விசா​ரணையை நீதிப​ தி​கள் தள்​ளி​வைத்​தனர்.