tamilnadu

img

மைக்கேல்பட்டி கிராமத்தினரிடையே ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி

கிராம மக்கள்  ஆட்சியரிடம் நேரில் மனு

தஞ்சாவூர், ஜன.29- பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்ப வத்தில் மதமாற்றச் சம்பவம் ஏதும் கிடையாது, கிராமத்தில் உள்ள எங்க ளின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். எந்த விசா ரணை அமைப்பையும் அனுமதிக்கக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரிடம் மைக்கேல்பட்டி கிராம மக்கள் நேரில் மனு அளித்து வலியுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் தற்கொலைக்கு பாஜக, விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள், மத மாற்ற வற்புறுத்தலால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பொய்யாக குற்றஞ்சாட்டி வருகின்ற னர். 

இதற்கிடையில் மாணவி பேசுவது போல் வியாழக்கிழமை வெளியான மற்றொரு வீடியோவும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சூழ்நிலையில் மைக்கேல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தனசெல்வி சார்லஸ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராஜ், துணைத் தலை வர் டேவிட், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெ.குருமூர்த்தி உள்ளிட்ட கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் 18 பேர் வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரிடம் மனு அளித்தனர். அதில், “எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் கள் அடங்கும். இதுநாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடு இன்றி ஒற்று மையாக தான் வாழ்ந்து வருகிறோம். மதம் சம்பந்தமாக எங்கள் ஊரில் எந்தப் பிரச்சனையும் நடந்தது இல்லை. மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வோம். எங்கள் ஊரில் இயங்கும் தூய இரு தய பள்ளி 163 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பள்ளியில் 60 சத வீதத்துக்கு மேல் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் விடுதியி லும் இந்து மாணவிகளே அதிகம் தங்கி படித்து வருகின்றனர். இதுவரை பள்ளி யில் மதமாற்றம் தொடர்பான எந்தவித பிரச்சாரமும் நடந்ததே கிடையாது. தற்போது தற்கொலை செய்து கொண்ட மாணவி மரணத்தை வைத்து சில கட்சி, இயக்கத்தினர் ஆதாயம் தேடி வரு கின்றனர். நாங்கள் இதனை வன்மை யாக கண்டிக்கிறோம்.

மேலும், சில கட்சிகள் பலதரப் பட்ட குழுக்கள் அமைத்து விசாரிப்பதை யும் கண்டிக்கிறோம். எங்கள் ஊருக்கு யாரோ சிலர் வந்து, மாணவி மதமாற் றத்தால் தான் தற்கொலை செய்தார் என்று கூற வேண்டும் என்கின்றனர். பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக உண் மைக்குப் புறம்பான தகவல்களை சொல்ல வேண்டும் என்கின்றனர். அவர் கள் யார் என்று தெரியவில்லை. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழ்வதை சிலர் சீர் குலைக்க முயல்கின்றனர். இதை  தடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள் ளது. மனு அளித்த பின்னர் மைக்கேல் பட்டி கிராம மக்கள் செய்தியாளர்களி டம் கூறுகையில், சிலர் மறைமுக மாக எங்களிடம் நாங்கள் சொல்வது போல், அவர்களுக்கு எதிராக பேட்டி கொடுங்கள் என்று தொந்தரவு செய்கி றார்கள். மாணவி தற்கொலையை வைத்து பிரச்சனை செய்ய விரும்பு கிறார்கள். மாணவியின் தற்கொலைக் கும் மதமாற்றத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எங்களை வேறு யாரும், எந்த குழுவும் எங்கள் ஊருக்குள் விசாரணைக்கு வந்து, தொந்தரவு செய்யக் கூடாது. எங்களி டம் உள்ள மத ஒற்றுமையை சீர் குலைக்க கூடாது. எங்கள் ஊருக்கு பாதுகாப்பு வேண்டும். பதற்றமான நிலையில் உள்ளோம். இப்படி சொல் லுங்கள், அப்படி சொல்லுங்கள் என சிலர் எங்களை நிர்பந்தம் செய்கிறார் கள் என்றனர்.