tamilnadu

img

என்எல்சி நிர்வாகமே! தமிழர்களை புறக்கணிக்க இன்னும் எத்தனை வழிகளை தேடுவீர்கள்!

சு.வெங்கடேசன் எம்.பி., ஆவேச கேள்வி

மதுரை, ஏப்.23-  பணியிடங்களில் தமிழர்களை புறக்கணிக்கும் என்எல்சி நிர்வா கத்திற்கு, தமிழர்களை புறக்க ணிக்க இன்னும் எத்தனை வழி களை தேடுவீர்கள் என்று மார் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நெய்வேலி அனல் மின் நிறு வனத்தில் (என்எல்சி) “பட்டதாரி நிர்வாக பயில்நர்” (Graduate Executive Trainees) பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிக்கையை (எண் 02/ 2022) என்.எல்.சி வெளியிட்டு இருந்  தது.  ஏற்கெனவே 2020 இல் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் 2022 இல் தேர்வு முறைமையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேட் (GATE) - 2022 மதிப்பெண் அடிப்ப டையில் தேர்வு பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது.  கேட் 2022 தேர்வுகள் தகுதி யாக நிர்ணயிக்கப்படும் என்று  தெரிந்திருந்தால் பலர் தயார் ஆகி இருப்பார்கள்.

ஆனால் அதற்கான அவகாசம் தரப்படவில்லை. அறி விக்கை மிக மிக நெருக்குவெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே கேட் 2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்  பட்டுவிட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது.  இன்னொரு முக்கிய விசயம். ஏற்கெனவே தேர்வுப் பட்டியலின் உள்ளடக்கம் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்விக் குறி யாகி இருக்கிறது. 2010 க்கு முன்  பாக தேர்வுப் பட்டியலில் 80 சத வீதம் பேர் வரை கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2020 இல் 5 சதவீதத்திற்கும் கீழே இந்த விகிதம் போய் விட்டது.  இந்த தேர்வுப் பட்டியல் வெளி வந்தால் பேரதிர்ச்சியை தரக் கூடும். 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் ஒரு தமிழராவது இருப்  பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்நிலையில் இதுகுறித்து என்.எல்.சி தலைவர் ராகேஷ் குமா ருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், அறி விக்கை எண் 02/2022 ஐ ரத்து செய்ய வேண்டும். தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டாம். மீண்டும் முந்தைய முறைமையின் அடிப்ப டையில் தேர்வை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் தமிழக இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.