சென்னை, ஜூலை 23 - தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்பு தலைவர்களைக் குறிவைத்து, தேசிய புலனாய்வு முகமை (NIA) ஞாயிறன்று 21 இடங்களில் சோதனை மேற்கொண்டது. திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருப்பூர், விழுப்புரம், திருச்சிராப் பள்ளி, புதுக்கோட்டை, கோயம்புத் தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில், டிஜிட்டல் டிவைஸ்கள், செல்போன், சிம் கார்டு, மெமரிகார்டுகள், ஆவணங் கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.திருநெல்வேலியில் உள்ள எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அதி காரிகள் சோதனை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் பாமக பிரமுகரான ராம லிங்கம் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கரு தப்படுவர்கள், தலைமறைவாக இருப்ப வர்களைக் குறிவைத்து இந்த சோத னை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்பு உடைய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பற்றி துப்பு வழங்குவோருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என வும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. என்ஐஏ நடத்திய இந்த சோதனை முஸ்லிம் இயக்கத்தினரை மிரட்டி அச்சுறுத்தும் முயற்சி என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.