tamilnadu

புதிதாக உருவாகும் தீயணைப்பு ஆணையம்

புதிதாக உருவாகும் தீயணைப்பு ஆணையம்

சென்னை: தமிழக காவல் துறை​யின் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்கர்  ஜிவால் ஆக.31 ஆம் தேதி​யுடன் பணி ஓய்வு  பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால காவல்துறை  அனுபவத்​தில் அவர் சிறப்​பாக பணி செய்​துள்​ளார். இந்த அனுபவத்தை பயன்​படுத்​திக்  கொள்ள தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ளது. அதன்​படி, காவல்துறை ஆணை​யம் போல், தீயணைப்பு மற்​றும் மீட்புப் பணி​கள்  துறைக்கு புதிய ஆணை​யம் ஒன்றை ஏற்​படுத்த  தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ளது. அடிக்​கடி  பட்​டாசு விபத்​துகள் ஏற்​பட்டு பெரும் பொருள் இழப்​பு​கள் மட்​டும் அல்​லாமல், ஏராள ​மான உயிர் இழப்​பு​களை​யும் தமிழகம் சந்​தித்து வரு​கிறது. இது​போன்ற விபத்​துகள் மற்​றும் பேரழிவு தீ விபத்​துகளை முற்​றி​லும்  தடுப்​ப​தற்கு தேவை​யான வழி​முறை​களை இந்த ஆணை​யம் வழங்​கும். அதை அடிப்​படை​யாக வைத்து புதிய கொள்கை முடிவு  எடுக்​கப்​பட்டு தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி ​கள் துறை இயங்கும். அது​மட்​டும் அல்​லாமல் தீயணைப்புத் துறைக்கு தேவை​யான காலத்​துக்கு ஏற்ப மேம்​பட்ட நவீன உபகரணங்​கள், கருவி​கள்  வாங்​கு​வது தொடர்​பாக​வும் இந்த ஆணை​யம் ஆலோ​சனை​கள் வழங்​கும் என அதி​காரிகள் தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது. இந்நிலையில், புதிதாக உருவாக்கும் தீய ணைப்பு ஆணையத்துக்கு சங்கர் ஜிவால்  தலைவராக இருப்பார் என தகவல்  வெளியாகியுள்ளது.