tamilnadu

img

தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி

விருதுநகர், ஜன.1- விருதுநகர் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள தேவாலயங்க ளில் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. விருதுநகர் தூய இஞ்ஞாசியர் தேவா லயத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்புத் திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. பங்குத் தந்தை பெனக்டிக் அம்புரோஸ் மற்றும் உதவி பங்குத் தந்தை ஜெபஸ்டின் ஆகியோர் திருப்பலியை நடத்தினர். பாண்டியன் நகரில் உள்ள தூய சவே ரியார் தேவாலயத்தில் பங்குத் தந்தை ஸ்டீபன் சேவியர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதேபோல், ஆர்.ஆர்.நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயம் மற்றும் அனைத்து தேவா லயங்களிலும் திருப்பலி மற்றும் நற் கருணை விருந்து நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற் றனர்.