புதுதில்லி, ஜூலை 16 - ஜூலை 18 முதல் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலுக்கு வருவதால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களின் விலைகள் கடுமையாக உயரவுள்ளன. இறைச்சி, மீன், தயிர் மற்றும் பனீர் போன்ற முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபி ளிடப்பட்ட உணவுப் பொருட்கள், அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பேக் செய்யப்படாத உணவுப் பொருட்கள், பேனா, மை, கத்தி, பிளேடு, ஸ்பூன்கள், கத்திரிக்கோல், எல்இடி விளக்குகள், சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலை உயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி சண்டிகரில் 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட் டம் நடைபெற்றது. இதில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப் பட்டது. இதுவரை விலக்கு அளிக்கப்பட்டிருந்த சரக்குகள், சேவைகளுக்கும் புதிதாக வரி விதிக்கப்பட்டது.
இவ்வாறு புதிதாக விதிக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட பொருட்கள் - சேவைகளுக் கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் ஜூலை 18 முதல் அமலுக்கு வருகின்றன. இதனால், திங்கட்கிழமை முதல் பல்வேறு சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு நுகர்வோர் அதிக விலை அல்லது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லீகல் மெட்ராலஜி (Legal Metrology) சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப் பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிளிடப்பட்ட இறைச்சி, மீன், பால், தயிர், மோர், பனீர் மற்றும் லஸ்ஸி போன்ற சில்லரைப் பொருட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. ஆனால், 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் இவற்றுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால், இந்தப் பொருட்களின் விலைகள் உயர உள்ளன. பால் நிறுவனமான அமுல் இந்த பொருட்களின் விலையை மாற்றியமைக்கலாம் என்று தக வல்கள் வெளியாகியுள்ளன. வணிக பெயரில் (பிராண்ட்) அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும் முதன்முதலாக 5 சதவிகித ஜிஎஸ்டி-யை மோடி அரசு விதித்துள்ளதால், இவற்றின் விலை களும் ஜூலை 18 முதல் உயர்கின்றன. எல்இடி விளக்குகள், எல்இடி சாதனங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ள தால், இந்தப் பொருட்களின் விலைகளும் உயர வுள்ளன.
அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்களுக்கு ( Maps and charts including atlases ) ஜூலை 18 முதல் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. கத்திரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்கள் மற்றும் பென்சில், ஷார்பனர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், போர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள், லேடில்ஸ் ஸ்கிம் மர்கள், கேக்- போன்ற அன்றாடம் பயன்படுத் தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி முன்பு 12 சத விகிதமாக இருந்தது, ஜூலை 18 முதல் 18 சத விகிதமாக உயர்வதால், இந்தப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர உள்ளன. மருத்துவமனைகளில் ஐசியு (ICU) தவிர்த்து ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000-க்கும் அதிகமாக ஐடிசி இல்லாத அறைக்கு வாடகை வசூலிக்கப்படும் பட்சத்தில், அதற்கு இனிமேல் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்தி யாக வேண்டும்.
நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறை வாக வாடகை வசூலிக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு (hotel room‘s) 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட உள்ளது. மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான வரி 12 சதவிகிதத்திலி ருந்து 18 சதவிகிதமாகவும், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகவும் உயர்கிறது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகி தத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்கிறது. சூரிய சக்தியில் இயங்கும் ஹீட்டர்களு கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சத விகிதமாகவும், பதப்படுத்தப்பட்ட தோல் களுக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும் உயர்கிறது.
வங்கிகள் தங்களின் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கும் காசோலைகளுக்கு (cheques) வசூலிக்கும் கட்டணத்திற்கு இனி மேல் 18 சதவிகித ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஓரிரு சேவைகளுக்கான ஜிஎஸ்டி குறைப் பும் அமலுக்கு வருகிறது. அதாவது, எரி பொருட்களை உள்ளடக்கிய ஆபரேட்டர்களு டன் கூடிய சரக்கு வாகனங்களை வாட கைக்கு எடுப்பதற்கு முன்பு 18 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 12 சதவிகிதமாக குறைகிறது. எலும்பு முறிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப் படும் சாதனங்கள் , உடலின் செயற்கை பாகங் கள், குறைபாடுகளை ஈடுசெய்ய உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், கண்விழி லென்ஸ் இவற்றின் ஜிஎஸ்டி விகி தங்கள் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகி தமாக குறைகின்றன. கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கும் விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப் படவில்லை.