tamilnadu

img

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: புதிய டிஎஸ்பி உறுதி

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: புதிய டிஎஸ்பி உறுதி

இராஜபாளையம், மே 28- இராஜபாளையம் உட்  கோட்ட காவல் சரக துணை  காவல் கண்காணிப்பாளராக பி.பஸிணாபீவி புதனன்று பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளரி டம் பேசுபையில், கோவை யில் பணியாற்றி தற்போது இராஜபாளையத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முத லில் இங்கு எந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக களப்பணியில் இறங்குவேன். முக்கிய மாக, சமூகவிரோத செயல்  கள், அரசால் தடைசெய்யப் பட்ட போதை பொருட்கள், லாட்டரி விற்பனை முற்றி லும் தடுக்கும் நடவடிக்கை கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கண்காணித்து நட வடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடு தல், பள்ளி, கல்லூரி, தொழிற்  கூடங்கள், பொது இடங்களி லும் போதை பொருட்கள் ஒழிப்பு, பெண்கள், குழந்தை கள் பாதுகாப்பு, சாலை பாது காப்பு, சைபர் கிரைம் குற்றங்  கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் உத்தேசித்துள்ளேன். கவனத்திற்கு வரும் பிரச்சனையில் சட்ட ரீதி யான நடவடிக்கைகள் மேற்  கொள்ளப்படும். மேலும் புகார் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள், நேரடியாக காவல்நிலையத்துக்கு வர லாம். சிபாரிசுக்கு யாரை யும் அழைத்துவர தேவை யில்லை என்றார்.