திருநெல்வேலி, ஏப்.14- கடந்த ஏப்ரல் 6 அன்று சென்னை யில் இருந்து புறப் பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திர னின் பணியாட்கள் சதீஷ், அவரின் சகோ தரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர், உரிய ஆவணங்களின்றி 4 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட னர். இதில் ரூ. 1 கோடி பாஜக தொழில் துறை பிரிவு தலைவர் கோவர்த்தனுக்கு சொந்தமான கொரியன் ரெஸ்டா ரண்ட் அலுவலகத்தில் இருந்து பெறப் பட்டது என்று சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியா னது. இதனையடுத்து கொரியன் உண வகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலை யில், தற்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், பாஜக தொழில்துறை பிரிவு தலைவருமான கோவர்த்தன னுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனிடையே, திருநெல்வேலி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் நண்பரும்- பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளருமான மகாவீர் என்பவரின் வீடுகள் மற்றும் ராஜேஷ் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளிலும் போலீ சார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.