tamilnadu

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை

புதுதில்லி,மார்ச் 3- தஞ்சை மாவட்ட பள்ளி மாணவி லாவண்யா  தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என்று தேசிய குழந்தைகள் நல  ஆணையம் வியாழக்கிழமையன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அரியலூரைச் சேர்ந்த  லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார்.  இவர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக வெவ்வேறு வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. கட்டாய மதமாற்றத்தால்தான் மாணவி இறந்தார் என்று கூறி பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர்  இதனை திசைதிருப்ப முயற்சித்தனர். ஆனால் மாணவி யின் மரணத்தை வைத்து மத மோதலை உருவாக்கும் வகையிலும் அதன்மூலம் அரசியல் லாபம் பார்க்கும் வகையிலும் செயல்பட்ட பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரை பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த அனைத்துத்தரப்பு மக்களும்  தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, மாணவி தற்கொலை குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து  விசாரணையை தொடங்கியது. ஆணை யத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் தஞ்சையில் விசாரணை யை நடத்தினர். இதையடுத்து, தற்போது தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை அறிக்கை யை வெளியிட்டுள்ளது. அதில், மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும்  அவர் தங்கியிருந்த விடுதி உரிய பதிவின்றி செயல்பட்டு உள்ளதாகவும், அந்த பள்ளி விடுதியின் மீது நடவடிக்கை எடுத்து மாண வர்களை வேறு விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும்   தமிழகத்தில் உரிய அனுமதி யின்றி செயல்படும் விடுதிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.  மாணவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரருக்கு மனநலம் குறித்த மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.