நாகப்பட்டினம், ஜூன் 29- நாகப்பட்டினம் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி வியாழனன்று தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மக்கள் சந்திப்பில் ஈடு பட்டு வரும் அவர், வியாழனன்று ஆவ ராணி, புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, செம்பியன் மகாதேவி, அகலங்கண், மகாதானம், ஒரத்தூர். அகர ஒரத்தூர், பாப்பா கோவில், கருவேலங்கடை, வடவூர், குறிச்சி, தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், அக்க ரைப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் அரசுத்துறை அலு வலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் வி.சுப்பிரமணியன், எம்.முருகை யன், நாகப்பட்டினம் தெற்கு ஒன்றி யச் செயலாளர் ஏ.வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் முகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.