கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் முதல்வருக்கு கோரிக்கை-அதிமுகவினர் கலக்கம்
சேலம்,ஆக.24- கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய தொடர்பு உள்ளது.இதுகுறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் முதலமைச்ச ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பேட்டி யால் அதிமுக தலைவர்களும் கட்சியினரும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் 2017 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் கைது செய்யப்படுவதற்குள் திடீரென்று விபத்தில் இறந்தார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்பு டையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசார ணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சில ஆவணங்களை அழித்த தாக கனகராஜின் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் பிணையில் வெளியே வந்த தன பாலை, நில மோசடி வழக்கில் மேச்சேரி காவல் துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர். இந்நிலையில், தனபாலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். இதன்பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவ ருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள் ளப்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் விடுதலையானார்.
இதையடுத்து தனபால் ஆகஸ்ட் 24 வியாழ னன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நில மோசடி வழக்கில் என்னை மேச்சேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கிலிருந்து விடு விக்கப்பட வேண்டும் என்றால், ரூ.10 லட்சம் தரு மாறு காவல் துறையினர் கேட்டனர். நான் தரமுடி யாது என கூறினேன். இதன்பின், மேச்சேரி போலீசார், எனது கண்களை கட்டிவிட்டு பல்லை உடைத்து என்னை சித்ரவதை செய்தனர். இந்த நில மோசடி வழக்கில் எனக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. எனவே, என்னை விடுவிக்க வேண்டும். எனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களா வில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்துவந்து சிலரிடம் கொடுத்தார். கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் எனது தம்பி கனகராஜை பெருந் துறையில் தான் சந்தித்தேன். தன்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்தி ருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் 5 பைகளை எடுத்துவந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். கோடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை கனகராஜ் பையில் எடுத்து வந்தார்.இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனக ராஜ் தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார் . எனது தம்பி உயிரி ழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை. வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசா ரிக்க வேண்டும். வழக்கில் எடப்பாடி பழனி சாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது. அவரை விசாரித்தால் பல உண்மை கள் தெரிய வரும். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இதுகுறித்து தெரியவரும்.
போலீசார் எனது செல்போனை எடுத்துக் கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதை சிபிசிஐடி காவல் துறையிடம் தெரிவிக்க தயாராக உள்ளேன். இதுவரை நான் தெரிவிக்காமல் இருந்ததற்கு கார ணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அதனால் கோடநாடு கொலை வழக்கு குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தேன். தற்போது முதல்வர் என்னை காப்பாற்றுவார் என நம்பி உண்மைகளை சொல்கிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று தெரிவித்தார்.