கண்ணூர், டிச.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கண்ணூர் மாவட்டச் செயலாள ராக எம்.வி.ஜெயராஜன் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு 2022 ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கண் ணூரில் நடைபெற உள்ளது. அதை யொட்டி கிளை முதல் மாநில அளவி லான மாநாடுகள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் மாவட்ட மாநாடுகளின் தொடக்கமாக கண்ணூர் மாவட்ட மாநாடு டிச.10முதல் 12 வரை கண்ணூரில் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் முதல்வருமான பினராயி விஜயன் மாநாட்டை வெள்ளியன்று (டிச.10) தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் ஏ.விஜயராகவன், பி.கே.ஸ்ரீமதி, இ.பி.ஜெயராஜன், கே.கே.சைலஜா, எம்.வி.கோவிந்தன் ஆகியோர் பேசினர். செயல்பாட்டு அறிக்கை மீதான பொது விவாதம் சனிக்கிழமை முடிவடைந்தது. இரண்டு நாட்கள், ஐந்தரை மணி நேரம் நடந்த இந்த விவாதத்தில் 12 பெண்கள் உட்பட 49 பேர் கலந்து கொண்டனர். விவாதங்களுக்கு மாவட்ட செயலாளர் எம்.வி.ஜெயராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் ஆகியோர் பதில் அளித்த னர். ஞாயிறன்று மாவட்ட செயலாளராக எம்.வி.ஜெயராஜனை (61) மாநாடு தேர்வு செய்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடகரை தொகுதியில் எல்டிஎப் வேட்பாளராக பி.ஜெயராஜன் போட்டியிட்டதைத் தொடர்ந்து, எம்.வி.ஜெயராஜன் மாவட்ட செயலாளரானார். மாணவர் இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்த இவர் சட்டப் பட்டதாரி ஆவார்.