tamilnadu

img

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்டோபர் 30 புதனன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் பல்வேறு கட்சிகள்,அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

;