tamilnadu

பாலியல் தொந்தரவு அல்ல

மும்பை,பிப்.24- பெண்ணிடம் ஒருமுறை ஐ லவ் யூ என்று கூறுவது பாலியல் தொந்தரவு ஆகாது  என்று மும்பை போக்ஸோ நீதிமன்றம் வினோதமான தீர்ப்பை அளித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மும்பையில் வாலிபர் ஒருவர் தங்களது மகளிடம் ஐ லவ் யூ என்று  கூறியதாகவும்  மகளைப் பார்த்து முறைத்தது டன் கண் சிமிட்டியதாகவும்  அவளது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.  இந்த புகாரின்பேரில், வாடாலா டி.டி.  காவல்துறையினர், 23 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மும்பை போக்சோ நீதி மன்றத்தில்  இந்த வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது.  இந்நிலையில் இந்த வழக்கில் பிப்ரவரி 24 அன்று நீதிபதி கல்பனா பாட்டீல் வழங்கிய தீர்ப்பில், குற்றம்சாட்டப் பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாக அறிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் அவளிடம் ஒரு முறை ஐ லவ் யூ என்று கூறியுள்ளார் - அந்தப் பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று ஐ லவ் யூ என்று கூறியதாக வழக்குத் தொடரப்படவில்லை என்றும்  பாதிக்கப்பட்டவரிடம் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ ஒரு முறை கூறு வது அன்பின் உணர்வை வெளிப்படுத்து வதாகத்தான் இருக்கும்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கில் இச்செயலைச் செய்ததாக கூற முடியாது என்றும் நீதிபதி கல்பனா பாட்டீல் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.