சென்னை, மார்ச் 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: திரைப்பட பின்னணி பாடகர், கலை மாமணி டி.எம்.செளந்தரராஜன் நூற் றாண்டில், அவர் வாழ்ந்த வீடு அமைந் திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி தரு கிறது. தன்னுடைய 24 வயதில் பாடத் தொடங்கிய செளந்தரராஜன், 88 வயது வரை 11 ஆயிரம் பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட் பட 11 மொழிகளில் பாடி சாதித்தவர் செளந்தரராஜன். ஒவ்வொரு நடிகருக்குத் தக்க விதத்தில் குரலை மாற்றி பாடும் வித்த கராக, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர் என்றென்றும் மக்க ளோடே தன் குரலால் வாழ்ந்து வரு கிறார். செம்மொழி தமிழை போற்றும் விதத் தில் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை யில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலில் இறுதியாக அவரின் குரலும், பங்கேற்பும் இருந் தது. அதுவே அவரின் கடைசி பாட லாகவும் அமைந்தது குறிப்பிடத் தகுந் தது. மதுரையில், அவர் பிறந்து வாழ்ந்த பகுதியில் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள் ளது. தமிழ்நாடு அரசு விரைவில் அதனை யும் சாத்தியமாக்க வேண்டுமென வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.