திருவனந்தபுரம், ஜுன் 27- கேரளத்தில்நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் தடுப்புக்காக அமெரிக் காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தை (சிடிசி) மாதிரியாக கொண்ட கே-சிடிசி கேரளத்தில் அமையவிருக்கிறது. தொற்று மற்றும் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தும் இம்மையம், பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள பொது சுகாதார பயிற்சி மையத்துடன் இணைந்து செயல்படும். கே-சிடிசியின் உருவாக்கத்தின் டிபிஆர் (திட்டம்) தயாரிப்பதற்காக இந்தி யாவின் பொது சுகாதார அறக்கட்டளை யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரி மாறப்பட்டது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் முன்னிலையில், ஐஐபி சிஎச் இயக்குநர் டாக்டர். ஸ்ரீதர் கடம், மருத்துவக் கல்வித் துறை செயலர் டாக்டர். ரத்தன் கேல்கரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒப்படைத்தார். சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர். கே.ஜே. ரீனா, மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் டாக்டர் தாமஸ் மேத்யூ, கே-சிடிசி சிறப்பு அதிகாரி எஸ்.ஏ.ஹாபிஸ் மற்றும் அதி காரிகள் கலந்துகொண்டனர்.
சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம்
சமூகத்தின் அனைத்துப் பிரிவின ருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே கே-சிடிசியின் நோக்கமாகும் என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். அதிகரித்து வரும் தொற்று நோய்களும் அவற்றுக்கு எதிரான சுகாதாரப் பாது காப்பும் பெரும் சவால்களை முன்வைக் கின்றன. கோவிட் தொற்றுநோய்களின் போதுதான், அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மாதிரி யில் மாநிலத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முதல்வர் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்கென ஒரு தொகை ஒதுக்கப்பட்டு சிறப்பு அதிகாரியும் நிய மிக்கப்பட்டுள்ளார். நடைமுறைகளை விரைவுபடுத்தி கே-சிடிசி நடைமுறைப் படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஒன் ஹெல்த் அணுகுமுறை
கே-சிடிசி-யின் முக்கிய நோக்கம் சுகா தாரப் பாதுகாப்பு, தொற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், நோய் முன்னேற்றம், பொது சுகாதாரத் தரவு மேலாண்மை, சான்றுகள் அடிப்படை யிலான சுகாதாரக் கொள்கை பரிந்துரை கள், பிற ஆராய்ச்சி நிறுவனங்களை ஊக்குவித்தல், சுகாதாரப் பிரச்சனை களைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ‘ஒன் ஹெல்த்’ அணுகு முறையை வளர்ப்பது. தொற்று நோய்கள் உட்பட, ஒரு நிலையான இயக்க மாதிரி யை உருவாக்குதல். கே-சிடிசியின் முக்கிய முழக்கம் உலக அளவில் சிந்தித்து உள்ளூரில் செயல்படுத்தல் (‘திங்க் குளோபல், ஆக்ட் லோக்கல்’) என்பதாகும். பிரதேச தலையீடு, தரவு சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவு படுத்துவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கே-சிடிசி செயற்கைக்கோள் மையங்கள் நிறுவப்படும். மேலும், மற்ற மாநிலங்களுக்கும் தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் சுகாதாரப் பாது காப்பு ஆகியவற்றில் கே-சிடிசி தேசிய முக் கியத்துவம் வாய்ந்த மையமாக மாறும். சுகாதாரத் துறையின் அடிப்படை யான கள அளவிலான செயல்பாடுகள் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் நிறு வனங்களை ஒருங்கிணைத்து, சுகா தாரப் பாதுகாப்பின் அனைத்துத் துறை களிலும் சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாட்டிற்கான சிந்தனைக் குழுவாக கே-சிடிசி செயல்படும். பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பிற இயற்கை பேரிடர்கள் தொடர்பான அனைத்து அவசர நட வடிக்கைகளுக்கான மையமாகவும் இது இருக்கும்.