https://www.facebook.com/kbcpim/
https://twitter.com/kbcpim
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டுவரலாமா என்று மோடி அரசு யோசிக்கிறது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்து, மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை கொண்டுவர திட்டமிடுகிறார்கள். பொதுசிவில் சட்டத்தை யும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். வரக் கூடிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர், இந்தி யாவிற்கு சோகமான, துயரமான வரலாற்றை நிறுவுகிற கூட்டமாக அமையப் போகிறது என்பதை பார்க்கிறோம். இப்படியான முயற்சிகளால் பாஜக அரசு தங்களை தக்க வைத்துக்கொள்வதோ, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரப்போவதோ நடைபெறப் போவதில்லை. அது பகல் கனவு என்பதை இந்திய நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள். ஏற்கெனவே பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளது.