tamilnadu

img

பஹல்காம் பாதுகாப்பு குறைபாட்டிற்கு இன்னும் பதிலளிக்காத மோடி அரசு!

பஹல்காம் பாதுகாப்பு குறைபாட்டிற்கு இன்னும் பதிலளிக்காத மோடி அரசு!

சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பேச்சு

கண்ணூர், மே 29 - பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான மூன்று முக்கியமான பிரச்ச னைகளுக்கு ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறினார். “போர் நிறுத்தமும் ஏற்பட்டு விட்ட பின்னணி யில், தற்போதாவது நாட்டின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்” என்றார். கண்ணூரில் காங்கிரஸ் (எஸ்) கட்சியின் மறுசீரமைப்பு ஆண்டு விழாவை, எம்.ஏ. பேபி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசுகையில், “எல்லையிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலை வில் உள்ள பஹல்காமை பயங்கரவாதிகள் எந்தத் தடையும் இல்லாமல் எப்படி அடைந்தார்கள், படுகொலையை செய்துவிட்டு, எப்படி அவர்களால் இந்தியாவை விட்டு வெளியேற முடிந்தது; ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொலையாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவோ கொல்லவோ முடிந்ததா? என மூன்று முக்கியமான கேள்விகள் உள்ளன. இதற்கு இப்போது வரை பதிலளிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு அதற்கு தயாராக இல்லை. அரசே கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர், பீகாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்” என்று எம்.ஏ. பேசி குற்றம் சாட்டினார்.