tamilnadu

img

சுற்றுச்சூழல் அழிவைத் தீவிரப்படுத்திய மோடி அரசு - பொ.இராஜமாணிக்கம்,

நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும்  பிப்.28 தேசிய அறிவியல் தினமாக  அனு சரிக்கப்படுகிறது. விஞ்ஞானி சர்.சி.வி ராமன் அவர்கள் 1928 ல் தனது மிகச் சிறந்த ஒளிச் சிதறல் கண்டுபிடிப்பை பிப்.28 அன்று அறிவித்தார். அதற்காக 1930ல் நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அந்தக் கண்டு பிடிப்பை கொண்டாடும் விதமாக இந்திய அரசு 1986ல் முடிவெடுத்து 1987 முதல் கொண்டாடி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொரு ளுடன் இந்நாள் கொண்டாடப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்: “நீடித்த நிலைத்தகு வளர்ச்சிக்கான உள்ளூர் தொழில்நுட்ப தலையீடுகள்” என்பதாகும். இதன் கீழ் கால நிலை மாற்றம், இயற்கை வளங்கள் அழிந்து வருதல், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நீடித்த  நிலைத்த வளர்ச்சி ஆகியனவற்றில் உள்ள சவால்களை அறி வியல் தொழில்நுட்பம் மூலமாக எதிர்கொள் ளும் முறைகளை விளக்கி விழிப்புணர்வு உரு வாக்குவது, உள்ளூர் தொழில் நுட்பத் தீர்வு களை முயற்சிக்க இந் நாளில் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கிறது.

நீடித்த நிலைத்தகு வளர்ச்சி என்றால் என்ன?

நீடித்த நிலைத்தகு வளர்ச்சி என்பது மூன்று பகுதிகளைக் கொண்டது. இம் மூன்று பகுதிகளும்  ஒன்றொடொன்று இயைந்து மேம்பாடு அடைவதாகும். அம் மூன்று பகுதி கள் சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு என்பதாகும். மேலே உள்ள படம் மூலம் அறியலாம். சுற்றுச் சூழல் தாங்கும் (Bearable) அள விற்கு ஒரு சமூகம் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். பொருளாதாரம் சமத்துவமாகப் (Equitable)  பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், பொருளாதார மேம்பாடு சுற்றுச் சூழலை பயன்படுத்தும் அளவிற்கு அதைத் தக்க வைத்துக் (Viable)கொள்ள வேண்டும். இவ்வாறு இம்மூன்றும் இயைந்து இயங்கு வதே நீடித்த நிலைத்தகு வளர்ச்சி ஆகும்

இப்போது ஒரு கேள்வி…  

இந்தியாவில் இயற்கை வளங்கள்  அது தாங்கிக் கொள்ளும் அளவிற்கு பயன் படுத்தப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. 2015-2020ல் மட்டும் 6,68,400 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 60களில் இருந்து நிலத்தடி நீரை நாம் இரண்டு மடங்காக பயன்படுத்தி வருகிறோம். 24% நீர் ஆதாரங்கள் குறைந்துள்ளன. இத னால் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இப்படியாக இயற்கை வளங்களை தாங்க முடியாத அளவிற்கு அழித்து வருகிறோம்.

மற்றொரு கேள்வி…

இயற்கை வளங்களை எல்லை மீறி அழித்துப் பயன் பெறுபவர்கள் யார்?  அதை பொருளாதார மேம்பாட்டில் கண்டறிய லாம். பொருளாதார மேம்பாட்டில் நம்  நாட்டில் 1% நபர்கள் 49 சதவீத சொத்துக் களைக் குவித்து வைத்திருப்பதும் 99% நபர்கள் மிச்சமுள்ளதைப்  பகிர்ந்து கொண்டி ருக்கின்றனர் என்பதும் இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த சமத்துவமற்ற பொருளாதார மேம்பாடு எப்படி நிலைத்தகு வளர்ச்சிக்கு வழி வகுக்கும்?

மேலும் ஒரு கேள்வி…

இந்தியாவில் வளர்ச்சி என்பது சுற்றுச் சூழலை அழிக்கும் விதமாகவே உள்ளது. குறிப்பாக 2005 முதல் 2015 வரை  பத்து வருடங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 7-8 சதவீதமாக இருந்த போது 11 மாநிலங்களில் இயற்கை வளங்கள் பெரு மளவில் குறைந்துள்ளன. ஆனால் 13 மாநி லங்களில்  0-5% வளர்ச்சி மட்டும் இருந்தது.அவற்றில் மூன்று மாநிலங்களில் மட்டும் இயற்கை வளங்கள் 5% அதிகரித்து இருக்கிறது (டவுன் டூ எர்த்-2018). தரிசு நிலங்களை மேம்படுத்துதல், மரங்கள் நடுதல், நீர் நிலைகளைத் தூர் வாருதல், நீர்சேமிப்பு ஆகியன நடந்துள்ளன. இதில் இருந்து புரிந்து கொள்வது என்ன வென்றால், ஒரு புறம் உயர்கின்ற வளர்ச்சி விகிதம் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டே வரும்; அதே சமயத்தில்  இயற்கை வளங்களை அதிகரிக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ முடியாது என்பது தான். எனவே  இயற்கை வளங்கள் என்ற முதலீட்டை கண்காணித்து, மேம்படுத்துவது என்பது நீடித்த மேம்பாட்டுக்கான ஒரு முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். இதைத் தான் பொருளாதார மேம்பாட்டுக்கும் இயற்கை வளங்களுக்கும் உள்ள தொடர் பாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டத் திருத்தங்கள்:

ஆனால் தற்போதைய ஒன்றிய அரசு இயற்கை வளங்களைக் கார்ப்ப ரேட்டுகளுக்கு  தாரை வார்த்து சூறையாடும் அளவிற்கு அனைத்துச் சட்டங்களையும் மாற்றியுள்ளது. கொரோனா காலத்தைப் பயன்படுத்தி சட்டத் திருத்தங்களை முன்  மொழிந்து கருத்துக் கேட்பு என்ற நாடகத்தை இக் காலங்களில் நிறைவேற்றி நிரந்தர சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. சுற்றுச்சூழல்  தாக்க மதிப்பீட்டு அறிக்கை சட்டச் திருத்தம்-2020 என்பது, சுற்றுச் சூழல் தாக்கீட்டு மதிப்பீடு  பல திட்டங்களுக்கு தேவையற்றது எனக் குறிப்பிடுகிறது. ஏற்கனவே இதை செய்யாமல் நடந்து வரும் திட்டங்களை வரைமுறைப்படுத்தலாம் என்றும் திருத்தம் செய்துள்ளது.  காடுகள் சட்டத் திருத்தம் 2023 என்பது, பாதுகாக்கப்பட்ட காடுகளை தனியார் வணி கம் மற்றும் கட்டமைப்புத் திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கிறது.  வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் - 2022 என்பது, வனவிலங்குகளை ஆறு வகைகளாகப் பிரித்து  பாதுகாத்தது போய் மூன்று வகைகளாக்கி இருக்கிறது. ஆராய்ச்சி செய்வதற்கு கடுமையான விதிகளை அறிவித்துள்ளது. 

தண்ணீர் (Prevention and Control of Pollution) சட்டத் திருத்தம்-2024 என்பது, சட்டத்தை மீறுபவர்களுக்கு ஏற்கனவே இருந்த கிரிமினல்  தண்டனையை மாற்றி தண்டப் பணம் மட்டும் கட்டினால் போதும் என்றும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களின் பணிகளை ஒன்றிய அரசு தீர்மானிப்பது போலவும், சில தொழிற்சாலை களுக்கு சட்ட ரீதியாகவே விலக்கு அளிக்கும் வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கனிம வளச் சட்டத்திருத்தம்-2023 என்பது, இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த லித்தியம் உள்ளிட்ட ஆறு முக்கிய மான கனிமங்களைக் கண்டறிய  தனியார் கம்பெனிகளுக்கு ஏதுவாக திருத்தம் செய்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த இரட்டை வேடத்தை தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு நிகழ்வாக மக்களிடம் விளக்கி அனைவருக்கும் சமமான பொருளாதார மேம்பாடும், இயற்கை வளங்களை புதுப்பிக்கும் அளவிற்கான  வளர்ச்சித் திட்டங்களை உள்ளூர் அளவிலும் தேசிய  அளவிலும் திட்டமிட மக்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும்.