திருவாரூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சிஏஜி அறிக்கையின் மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊழலைப்பற்றி பேச பிரதமருக்கு யோக்கியதை உண்டா? என்று திருவாரூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜின் இல்லத் திருமண விழா திருவாரூரில் உள்ள பவித்திரமாணிக்கத்தில் ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்குமான நட்பு தேர்தல் சமயத்திலும், கூட்டணி நேரத்திலும் மட்டும் ஏற்படக்கூடிய நட்பு அல்ல. கொள்கை ரீதியான நட்பு. எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆளுங்கட்சியாக இருந்த போதும் அந்த நட்பு தொடர்கிறது. தொடர்கிறது என்றால், இது என் றைக்கும் தொடரும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என்பதை, இந்த திருமண விழாவில் நான் உறுதியாக அறிவிக்கிறேன்.
‘இந்தியா’ கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்றால், ஏதோ ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை மட்டும் வரக் கூடிய தேர்தலாக மட்டும் அதை நினைத்துவிடக்கூடாது. ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் என்று கூட நினைத்துவிடக்கூடாது. இந் திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதி கார ஆட்சியை, பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால், தமிழகத்தை காப்பாற்றியாச்சு. இந் தியாவை காப்பாற்றக்கூடிய நிலைக்கு நாம் தற்போது வந்திருக்கிறோம். இந்தியாவை காப்பாற்றுவதற்கா கத்தான் இப்போது இந்தியா கூட் டணி அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணியின் மூன்றா வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் மும்பையில் நடைபெற உள்ளது. அந்தக் கூட் டத்தில், முக்கிய அறிவிப்புகளை எல்லாம் அறிவிக்க உள்ளோம்.நானும் அந்தக் கூட்டத்துக்கு செல்ல விருக்கிறேன்.
15 ரூபாயாவது...
9 வருடமாக மோடி தலைமை யில் பாஜக ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில், இதை நிறைவேற்றியிருக்கிறோம், இந்த திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், சாதனைகள் செய்திருக்கிறோம், மக்களுக்கு நன்மைகளை செய்திருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? எதுவும் சொல்ல முடி யவில்லை. தேர்தலுக்கு முன் வெளி நாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தையெல்லாம் கைப்பற்றி, அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து, நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் ஒவ்வொருவருக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்போவ தாக அறிவித்தார். 15 லட்சம் வேண் டாம், ஒரு 15 ஆயிரமாவது கொடுத் தார்களா? 15 ஆயிரம் வேண்டாம், ஒரு 15 ரூபாயாவது கொடுத்தார் களா? இதுவரை கிடையாது.
நாட்டை இரண்டாக்கும் கொடிய ஆட்சி
நாட்டில் உள்ள 2 கோடி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறினார்கள். எங்காவது வழங்கப்பட்டிருக்கி றதா? இல்லை. வேலைகள் பறிக் கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியினுடைய நிலை. இதைவிட கொடுமை மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை இரண்டாக்கி வரும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இந்தியாவில் நடந்துகொண் டிருக்கிறது. இதுகுறித்து எல்லாம் கலந்துபேசி, இதற்கு ஒரு முடிவு கட்டவும், தேர்தலில் பாடம் புகட்ட வும், இந்தியா கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம். இதை பிர தமர் மோடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, எப்படி சட்டமன்ற, நாடாளு மன்ற, உள்ளாட்சி அமைப்பு தேர் தல்களில் ஒரு கூட்டணி அமைத்து, வலுவாக நடத்திக் கொண்டிருக்கி றோம். அந்த கூட்டணி தமிழகத் தில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அப்படிப் பட்ட திமுகவின் கூட்டணியும் இந்தியா என்ற கூட்டணியில் இணைந்திருக்கிறதே என்ற ஆத்தி ரம் பிரதமர் மோடிக்கு வந்துவிட் டது. அதனால்தான், அவர் எங்கே சென்றாலும், சுதந்திர தின நிகழ்ச்சி யாக இருந்தாலும், பல்வேறு மாநி லங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தாலும், நாம் அமைத்துள்ள கூட்டணியை விமர்சித்து, கொச் சைப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஊழல் வந்துவிட்ட தாம், 9 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஊழலை ஒழித்தே தீருவேன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பிரத மரை பார்த்து அடக்கத்துடன் கேட் டுக் கொள்வது, ஊழலைப் பற்றி பேசக்கூடிய யோக்கியதை பிரத மருக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளங்கள் சிஏஜி அறிக்கை யில் ஆதாரங்களுடன் வெளியிடு கின்றனர்.
சிஏஜி அம்பலப்படுத்திய ஊழல்கள்
ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன அருகதை இருக் கிறது? சிஏஜி என்பது ஒன்றிய அர சுக்கு கட்டுப்பட்டு இருக்கும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு வருடமும், அரசின் வரவு செலவுகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு வழங்கு வது சிஏஜியின் பணி. ஒன்றியத்தில் நடக்கும் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்சம் லாவண் யம் பெருத்துப்போன ஆட்சி யென்று சிஏஜி அறிக்கை கூறு கிறது. இதன்மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத் துக்கு வந்திருக்கிறது. பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத் தின் ஓய்வுத் திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம். இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. நிதியை கையாளு வதில் மோசடி நடந்துள்ளதாக இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 99999 99999 என்ற போலி செல் போன் எண்ணில் 7.5 லட்சம் பய னாளிகள் இணைக்கப்பட்டு பச்சை யாக ஒரு மோடியை செய்துள்ள னர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற நோயாளி கள் 88 ஆயிரத்து 760 பேர் இறந்து விட்டனர். ஆனால் அவர்கள் இறந்தபிறகும் சிகிச்சையளிக்கப் பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.